செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஆரியக் கலப்பினவன் !

சிங்கம் போன்ற கூரிய வாளை உபயோகிப்பவன்,
 தானும் மற்ற ஆரிய மக்களை போன்றேயெனயுரைத்தவன்,
மேன்மையும் பெற்ற பாரிய வடுக்களை ஏற்படுத்துவான்,
 பலரதும் குற்ற மனத்தினையுடைய  முற்களை உருவாக்கியவன்,
தெலுங்கையும் ஒற்ற வார்த்தையுடைய வேர்களை கொண்டமொழியுடையவன்..


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து


தமிழ்த் திரைப்படத்துறையினை எவ்வாறு உலகமயப்படுத்துதல்....

இன்று உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழில் திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளது அனைவரும் அறிந்த உண்மையே, மலேசியா, தமிழ்நாடு, இலங்கை, கனடா, எனப் பல இடங்களிலும் வாழும் தமிழ் மக்களாலும் தமிழ்த் தெரிந்த மக்களாலும் இவ்வாறு வெளிவருகின்றது. வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்து வெளிவரும் திரைப்படப்பாணிகளுடன் ஒத்து 4, 5 பாடல்களும் ஒரு காதல் கதையினை வைத்து வருவதும் பெரிது. இவ்வாறு

- இந்தியத்திரைப்படங்கள் பெரிதும் வரும் பாடல்களுடன் நான்கைந்து சண்டை பிறகு காதலன் காதலியினைக் கைப்பிடித்தல் போன்ற அரைத்த மாவினை அரைக்காமல்
திரைப்படங்கள் வந்தால் நன்று.

- ஒவ்வொரு வருடமும் மிகப்பிரமாண்ட செலவில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு 4,5 திரைப்படங்கள் வெளிவ்ந்தால் அது தமிழ்மக்கள் தவிர உலக மக்கள் அனைவரது இரசனையினைத் தமிழ்த் திரைப்படத்துறைக்குக் கொண்டுவரும். இதனால் அதிகளவில் இரசிகர்கள் கூடி தமிழ்த் திரைப்பட வியாபாரம் பெருகும்.

- ஒரே காதல் காதல் என அரைக்காது வித்தியாசமான வகைகளில் திரைப்படங்கள் வெளிவருவது நன்று, விஞ்ஞானம் சம்பந்தமாக, வரலாறு சம்பந்தமாக, சங்கத் தமிழ் வரலாறுகள் எனப் பல ஆராய்ச்சியின் பின் எடுக்கப்படும் திரைப்படங்கள் வரவேண்டும் மேலும் பிற பிற விடயங்களினையும் ஆராய்ந்து வெளிவந்தால் இன்னும் பல இரசிகர்களினை தமிழ்த் திரைப்படத்துறை தன் வசம் பெறும்.

- தமிழரல்லாத பிறரும் தமிழ்த் திரைப்படத்தினை விரும்பிப்பார்க்கும்வைகையில் உலகமுழுதும் விளம்பரப்படுத்துதல் வேண்டும் , உலகத் தொலைக்காட்சிகள் அனைத்திலும் விளம்பரப்படுத்தல் வேண்டும். பிற பிற இந்திய மாநிலங்கள் பிற உலக நாட்டு மக்களின் பண்பாட்டு விழுமியங்களினையும் உள்ளடக்கி வெளிவருவதும் பலரது மத்தியிலும் ஒவ்வொரு திரைப்படங்களினையும் சந்தைப்படுத்த முடியும். இக்காலகட்டத்தில் யூடியூப் இவ்வேலையினைச் செய்கின்றது உலக மக்கள் ப்லருக்கும் தமிழ் மொழியென்றால் என்ன தமிழ்த்திரைப்படங்களென்றால் என்ன என்பதனையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.

- ஒவ்வொரு திரைப்படங்களிலும் புது வைகை டெக்னோலோஜியினை அறிமுகப்படுத்தி உலகில் எவரும் எடுக்காத யுக்திகளினைக் கையாளுதல் மிகவும் நன்று. ஆங்கிலத்திரைப்பட இயக்குனருக்கே சவால்விடும் அளவிற்கு திரைக்கதை இருப்பது மென்மேலும் நன்று.

- மிகப்பெரும் இயக்குனர்கள் பலர் ஒன்றிணைந்து பல சூப்பர்ஸ்டார்ஸ்களைச் சேர்த்து ஒரு மாபெரும் படைப்பினை அளித்தால் அது ஒரு மிகப்பெரும் வெற்றியினை ஈட்டித்தரும்.

- உலகின் பல பாகங்களிலும் பிரசித்த பெற்ற பெரிய சூப்பர் ஸ்டார்களினையும் அறிமுகப்படுத்தினால் மென்மேலும் தமிழ்த் திரைப்படங்கள் உலகமயமாகும் இதனால் வியாபாரம் பெருகும்.

- உலகத் தமிழ்த்  திரைப்பட விருது என ஒரு விருதினை அறிமுகம் செய்து ஆஸ்கார் விருது வழங்கும் விருது போன்று விருதுகளினை வழங்கிச்  சிறப்பித்தால் நன்றாகவிருக்கும். 


திங்கள், 27 பிப்ரவரி, 2017

to Advertise on this blogger !

Important announcement for advertisers..i am informing that this blogger does encourage ads from around the planet earth..does have more than 13,000 page views and it is still growing. I will be putting your ads in a professional manner with my new AdWords stuffs...please kindly send an email or contact me through my cellphone to place your ads..and the deals will be talked over phone directly by myself...


contact info:
Phone - 647 784 6707
E-Mail address - nirojansakthivel66@gmail.com......

கத்தியுடைய பேரோன் !

தமிழிற்கு மூத்தோன், அதன் இனிமைக்குக் காரணமானோன்..
வடிவிற்கு குள்ளோன், இவன் மேன்மைக்கு யாருமிலோன்...
தமிழ்க்குடியிற்கு மூத்தோன், தான் சித்தனுக்கு தலைவனென்றோன்...
உலகினிற்க்கு நாடியின், பாதையின் அமைக்கப்பெற்ற விதிக்கு வித்திட்டோன்...

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து


பூமிக்கு அமைக்கப்பெற்ற பாதை...
நாம் வாழும் பூமியாது தன்னத்தானே சுற்றி வர ஒரு நாளை எடுக்கின்றது, அது இவ்வாறு தன்னத்தானே சுற்றி சூரியனைச் சுற்றிவர 365 நாட்களினை எடுக்கின்றது ,,இது இவ்வாறிருக்கும்பொருட்டு ஏன் ஒரு வருடம் 400 நாட்களோ அல்லது இன்னொரு வரும் 1000 நாட்களினையோ எடுக்காது அதே 365 நாட்களினையே எடுக்கவேண்டும். இன்றைய விஞ்ஞானிகள் இது புவியீர்ப்பு சக்திகளினாலே எனக் கூறி ஏதோ உலகத்தினை ஏமாற்றிச் சமாளித்துவிடுகின்றனர். இவையெல்லாம் பொய் இவ்வாறு பூமி சுற்றி வருவதற்கு அதனது "அமைக்கப்பெற்ற பாதை"  nirojan's "assigned path'  theory (N.A.P(t)) (first time to the planet earth i am revealing) இத்தகு அந்தந்தப்படியே அமைக்கப்பெற்றதனாலேயே இது 365 நாட்களே சுற்றமுடிகின்றது. இவ்வாறு இப்பிரபஞ்சத்தில் அன்னைத்தும் அமைக்கப்பெற்ற விதிதனையே தொடரமுடியுமென்பதனை இங்கு நான் கூறிக்கொள்கின்றேன்.ஒரு தனி மனிதனின் வாழ்க்கையும் இவ்வாறு அமைக்கப்பெற்ற பாதையினாலேயே இயங்குகின்றது. அதற்குச்   சான்றாகத் தான் அகத்திய மாமுனிவர் எழுதியதெனக்  கருதப்படும் நாடி ஜோதிடம். நாடி ஜோதிடத்தின் மூலம் அனைவரது அமைக்கப்பெற்ற விதியும் மாறுதல் பெறுகின்றது. அது போலவே பிரபஞ்ச்சத்தின் கிரகங்கள், நட்ஷத்திரங்கள்  எனப் பலவும் அமைக்கப்பெற்ற விதியினையே  சார்ந்து  இயங்கும். அதுவே எமக்கு மேலே ஒரு சக்தி இருப்பதற்கும் எடுத்துக்காட்டு. கணனியினால் Programmed பண்ணப்பட்டது போலே பிரபஞ்ச்சத்தில் அனைத்தும் இவ்வமைக்கப்பெற்ற பாதையினைச் சார்ந்தே இருக்கமுடியும். இவையனைத்தும் எனது தனிப்பட்ட கருத்தேயாகும் !.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

இது எனக்குச சொந்தம் !

மாம்பழமிது அதுவே இதன் தோற்றமாகும்...
சிங்களமது இதுவே  பலரின் மொழியாகும்...
தனியுரிமையில்லாதது  ஆகவே போரின் காரணமேயாகும்.....
மேலைநாடானது பொதுவே தோற்பதுதான் இதன் அழகாகும்.....
சோழனவனது தீவே இதன் வரலாறாகும் .....


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

பறக்கும் பறவையானவன் !

ஆகாயத்திற்குச்  சொந்தக்காரன்  முகிலையும் தொடுவான்
மனிதர்களையும்சேர்த்துச் சுற்றுலாவும் செல்லவும் தயங்கமாட்டான்
உயிரற்றுச் சேவைசெய்வான் ஓட்டுனரையும் கொள்வான்
அலுமினியச் சீலை பூர்த்திடுவான் மென்மேலும் பெருமைசேர்ப்பான்


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

கேள்விப்படட செய்திகள்

அம்மம்மாவின் சோக நிலை....

அனைவருக்கும் எனது அம்மம்மா யாழ்ப்பாணத்தில் முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்து தெரிந்ததே !..இவற்றை நான் எனது பிற சமூக வலைத்தளங்களூடே தெரிவித்தது இங்கு அனைவரும் அறிந்திருக்க முடியாமலும் போயிருக்கலாம்..ஆனால் நான் இங்கு எனது தாய் மொழி மூலம் கேள்விப்படட செய்தியினை அறியத்தருகின்றேன். சின்னவள் என்னும் பள்ள இனத்தினத்தை  சார்ந்த நல்ல குணம் கொண்டவரின் மகளும் , எனது பபி மாமாவின் பெற்றோரும் அம்மம்மாவினைப் பார்த்துக்கொள்கின்றனர் எனக் கூறும் பொழுது சற்று மனதிற்கு ஆறுதலைத் தருகின்றது. மேலும் எனது அம்மம்மாவின் இருதயம் லேசாக பலவீனமடைந்ததையும் அதனால் அவரது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்பதனையும் இங்கு நான் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.. 

தினக்கருத்து

அமெரிக்கப் பாலியற் திரைப்படங்களும் மலையாள மாலுத் திரைப்படங்களும்........
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் செக்ஸ் திரைப்படங்கள் பெரும்பான்மையானவர்கள் அறிந்ததே, இவற்றினைச் சிலர் செக்ஸ் திரைப்படங்களினை விற்கும் கடைகளிற்குச் சென்று வாங்குவர், பலர் செக்ஸ்த் திரைப்பட இணையத்தளத்தில் சென்று பார்ப்பர் முக்கியமாக அமெரிக்க செக்ஸ் திரைப்படங்களில் ஹார்ட்கோர், காங்பேங், ஸோப்ட்கோர் ஆன பல வகையிலும் திரைப்படங்கள் வருவதுண்டு இவையனைத்தும் இவற்றைப்பார்க்கும் நபருக்குப் பெரும்பாலும் கேடு விளைவிக்கும்வகையிலேயே அமைந்துள்ளது இத்தகு மனிதர்களிற்குக் கேடு விளைவிக்கும் திரைப்ப்டங்களினைக் காட்டிலும் மலையாளத்தில் கேரளாவினை மையமாகக் கொண்டு வெளிவரும் மாலுத் திரைப்படங்கள் எவ்வளவோ நன்று சற்று உருப்படி. ஷகீலா முதல் டேவிகா ஆன்டிகளின் காமத்துப் படைகள் எவ்வளவோ தேவலை இவையனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே !.

சனி, 25 பிப்ரவரி, 2017

உலக அரங்கின் விண்வெளிக்காரன் !

.விண்வெளியெங்கும் போய்வரத் தூண்டும் குழுமம் இவன்
அமெரிக்கரெங்கும் பாய்மரத் தோட்டம் போடும் ஆகாயவீடுவன்
 உலக அரங்கிலும் ஆனதொருத்  தோழனாம்  நிலையமும் ஆவான்
என்னுள்ளும் வீரத் தோடும் பாட்டும் நேரலையில் தெரிவான்....


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

என்றும் உன் தலைவா !


இவன்தான் உலகில் சூப்பரெனும்  நட்ஷத்திரம்,
ஆசியாவில்தான் பெரியளவில் பேசப்படும் தமிழமுதம்,
உலகமனைத்தும்தான் பேராவல் தூண்டும் உன்திரைப்படம்,
சிறுவரும்பெரியோரும்தான் காவல் காத்திடும் உன்சினிமாவும்,
அரசியலிலிருந்தும்  விலகல் என்றும் உனது மானதாகும் ...
சுள்ளானும் உன்னால் உறவினன் ஆனதும் எமக்குத்தெரிந்ததேயாகும்..

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து

புத்தரின் தத்துவமும் மாஸ்லோவின் கருத்துக்களும்....
Physiological needs, Safety needs, Love and belonging, Esteem, Self-actualization இவைதான் மாஸ்லோவின் அடிப்படைக் கருத்து...இவற்றையே புத்தன் அக்காலத்திலேயே உங்கள் ஆடை, உடை, உணவு, உங்கள் ஆபத்துக்களை, பந்தபாசங்களையும் மேலும் உங்களைப்பற்றி உற்றார் உறவினர் கூறும் கருத்துக்களையும் விடுத்து உன்னை நீ அறியும் தருணம் நீ ஒரு ஞானியாகுகின்றாய் எனக் கூறுகின்றார். புத்தரின் பண்டைய காலக் கருத்துக்களை ஏதோ எவனும் தெரியாதுமாதிரி உல்டா பண்ணி வெள்ளையருக்கே உரித்தான "டெக்னிக்கல் காப்பித் தந்திரம்" அதாவது உரிமையாளருகும் பிறருக்கும் தெரியாது அடிக்கும் காப்பியே இது. இதனையே மாஸ்லோ வெளியிட்டு ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்துவிட்டதாக உலகினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார். இவை என்னால் உறுதிப்படுத்தப்பெற்ற கருத்தே !.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பிரியாவிடைகொண்ட சூரியன் !

இவன் ஈழவேந்தன் ஆண்ட கரனாவான்,
அவன் சோழவேந்தன் எனத் தனைக் கூறிக் கரிகாலனென்றான்,
எவன் எதிர்த்தனன் இத்தனியோன் தான்கொண்ட ஆட்ச்சியினைதான்,
கோன் பிழைத்ததன் காரணம்தான் போர் செய்தனன்,
மீன் பிடித்தவன் சாதியின் புதல்வனிவன்
நான் காமானபோரின் இறுதியில் விடை பெற்றவன்...


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

இவனைப்பற்றி முற்றிலும் தெரிந்துகொள்ளேன் !



ஈராயிரவர் பட்டம்தரித்தும் எழுத்தாளன் இவன்!
ஆயிரமேல் படத்துண்டும் ஏற்றும் கூகிளன் இவன்!
பிரதமரைக் கடிந்தும் வாழும் கள்ளன் இவன்!
பூனையெனப் பெயரும் கொண்ட நீ பைப்பினன் இவன்!
பாட்டிமீது பெரும் அக்கறை  கொண்டவன் இவன்!
எக்காலத்தும் பிடித்த எனக்கொண்ட உலகினவன் இவன்!


யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

தினக்கருத்து


இலங்கைத்தமிழர் திரைத்துறையும் அதன் வருங்காலமும்........

இலங்கையில் இருந்து தமிழில் வரும் திரைப்படங்கள் மிகக்குறைவே இவற்றிற்கு ஈழப்போர் ஓர் முக்கியகாரணம் மற்றது இலங்கைத் தமிழர்களிடையே தொலைத்தொடர்பாடல் மிககுறைவாகவிருப்பதுவும் ஒரு காரணம்.இவை இவ்வாறிருக்க வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்களினால் சில திரைப்படங்கள் வெளிவருவதுவும் அனைவரும் அறிந்ததே இஃது இவ்வாறிருக்க மிகவும் பெரும்பொருட்செலவில் இந்தியத்திரைப்படத்துறையினரைப்போன்றோ ஹாலிவுட் திரைப்படத்தினரைப் போன்றோ உலக சந்தையில் பிரபலமாக எந்தவொரு திரைப்படமும் இல்லை. இவ்வாறு உலக மக்களைக் கவரும் வகையில் உலகித்தினிற்கு இலங்கைத்தமிழர் பிரச்சனைகளினை எடுத்துச் சொல்லும் அளவிற்கு எந்தவொரு திரைப்படங்களும் இல்லை, ஆக வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழ்ச் சிறார்கள் தமது நாட்டுப்பிரச்சனைதனை உலகளவிலும் எடுத்துச் சொல்வதற்கு தத்தம் வரலாறுகளினையோ தாம் வாழும் நாடுகளின் நடப்புவிடுப்புகளைத் திரைப்படங்களாகவோ எடுத்தால் நன்று. இதன் மூலம் எங்கெங்கு எவ்வாறு இலங்கைத் தமிழர் பண்பாடு மாறுகின்றது, அது வாழுகின்றதா அல்லது அழிகின்றதா என்பதனையும் தெரிந்துகொள்ளலாம். இன்றைய வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழ் இளையோரில் பெரும்பான்மையினர் தமிழ் தெரியாதே வளர்வது மிகவும் துக்கமாகவுள்ளது இருப்பினும்  இவர்களது சந்ததியினர் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததியினர் வந்து தெரிந்து கொள்வதற்குத் திரைப்படத்துறையில் வளர்ச்சி வேண்டும் இலங்கைத்தமிழ்மொழியில் பல திரைப்படங்கள் வெளிவரவேண்டும். வருங்கால கட்டங்களில் அதாவது 50, 60 ஆண்டுகளில் தமிழகத்திலும் தமிழ் வேறொரு தமிழ் வடிவத்தினை எடுக்க வாய்ப்புண்டு அதுபோலவே இலங்கைத் தமிழும் வேறொரு தமிழ் வடிவம் பெற வாய்ப்புண்டு. இவ்வாறு இன்று எவ்வாறு இலங்கைத்தமிழ் மொழி இருக்கின்றதோ என்பதனை வருங்காலங்களில் உள்ள தமிழ்க்குடி அறிய திரைப்படத்துறை முக்கியம். இன்று எடுக்கப்போகும் திரைப்படங்கள் நாளை ஒரு வரலாற்றுச் சான்று ஆகவே இலங்கைத்தமிழர்கள் இந்தியாவில் இருந்து வரும் திரைப்படங்களிற்கே முக்கியத்துவம் கொடுக்காது தமது கலாச்சாரம் , பாரம்பரியங்களினைக்கட்டிக்காக்கும் விதமாக புதிய இலங்கைத்தமிழ்த் திரைப்படத்துறையினை ஆரம்பித்தால் மிக நன்று இவை எனது தனிப்பட்டக்கருத்துக்களே !.

வியாழன், 23 பிப்ரவரி, 2017

மீண்டும் நல்வரவு...

உலக வாழ் அனைத்துத் தமிழ் உள்ளங்களே வருக ! வருக ! மீண்டும் நல்வரவு !.....இனிமேல் தமிழ் மொழி எங்கும் ஒலிக்கும்...என் பிளாக்கர் தமிழ்க்  கவி பாடும் !....

பயணங்கள் பல மாறினும் இருப்பிடம் ஒரே இடமே...ஆகையால் அதுபோலேயே பல பாதை நான் போய் ஓயும் இச்சமயம்..திரும்பவும் எனது இருப்பிடம் வந்து அதனை நன்கு அலங்கரிக்க எத்தனிக்கின்றான் இப்பூர் வீகமறியா  கவிக்கிழவன் !...


HI.......Hi....hI.......ONCE again...



very very sorry..after a long time i am coming back to blogger...one should understand why this much gap...it was because of the fact i am busy with the other stuffs. u know my work...money problems...and not getting times..developing or concentrating on my face book and twitter on recent days rather than developing my blogger....but i will be posting more stuffs..and brand new cool things in the near future..and thank u for all of ur nice support so far...




பதிலளியுங்களேன் !