திங்கள், 29 நவம்பர், 2010

கனவுகள்

லூகாஸின் சந்திப்பு....
இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அக்கனவினில் எனது 11 ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியராகவிருந்த ஜோனாதன் லூகாஸ் பைத்தியங்களை வைத்தியம் பார்க்கும் ஒரு இடம் போன்ற தோற்றத்தினைக் கொண்ட பூங்காவில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தார். அவரை நான் குறிக்கிட்டு இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டேன். அவரால் பதில் கூற இயலவில்லை. ஏதோ இப்பொழுது இல்லை எனப் பதிலளித்தாற்போல எனக்குத் தோன்றியது நானும் உடனேயே அங்கிருந்து நகர்ந்து வருவது போன்றிருந்ததே உண்மை, ஆனாலும் உண்மையில் அதன்பிறகு என்ன நடந்தேறியது என்பது பற்றி எனக்குத் தெரியாது. இக்கனவுதனை நான் கண்டதன் காரணத்தினை அறியேன் ஆனாலும் இக்கனவு நான் லூகாஸுடன் கொண்டிருந்த பகையுணர்வுதான் இவ்வாறு கனவில் அவரைக் காணத்தோன்றியதோ என்னவோ !.

பதிலளியுங்களேன் !