ஞாயிறு, 31 மே, 2009

கேட்ட கடிகள்

இந்தியாவும் அறிவாளியும்..................

ஒரு தகப்பனாருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், அப்பிள்ளைகள் இருவரும் பிறந்ததிலிருந்தே முட்டாள்கள் ஆகையால் மனம்வருந்திய தந்தை அவர்கள் பெயர்களாவது புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும் என்று விரும்பி ஒரு மகனுக்கு 'அறிவாளி' என்றும் இன்னொரு மகனுக்கு ' இந்தியா' என்றும் வைத்தார். தனது மகன்கள் இருவரையும் பள்ளியில் சேர்த்துப் படிக்க அனுப்பினார். பள்ளியில் இவ்விரு பிள்ளைகளின் முட்டாள்தனங்களை நினைத்துப் பெரிதும் வருந்தினார் ஆசிரியர். ஒரு முறை அவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் வேளை அவ்விரு முட்டாள் மாணவர்களையும் அழைத்து "டே பசங்களா இண்ணைக்கு இவ்வகுப்பினை பரிசோதிக்க ஒருவர்
வரப்போகின்றார் ஆகையினால நீங்கள் இருவரும் நான் தரும் இருபது ரூபா நோட்டினை வைத்துக்கொண்டு இன்று வகுப்பினுள் வராது வெளியில் சென்று விடுங்கள்" என்றார் ஆசிரியர். இதனைக்கேட்ட 'இந்தியா' பாடசாலையில் உள்ள கக்கூஸில் ஒழிந்துகொண்டான். 'அறிவாளி' தன்னால் எங்கும் போக இயலாது எனக்கூறி வகுப்பினுள்ளேயே இருந்துகொண்டான். வகுப்பினைப் பரிசோதனை செய்பவரும் அங்கு வந்து "மாணவர்களே இங்கு யார் அறிவாளி?" என வினவினார். அப்பொழுது 'அறிவாளி' என்ற பெயரைக்கொண்ட முட்டாள் சகோதரர்களில் ஒருவன் 'நான் தான் அறிவாளி" என்ற பதிலை அளித்தான். இதனைக் கேட்ட பரிசோதகரும் " நீ தான் அறிவாளியா! சரி இந்தியா எங்கே உள்ளது என்று கூறு பார்க்கலாம்" என்றார் அவர். அவனும் அவர் தனது சகோதரன் எங்குள்ளான் என்பதனை வினவுகின்றார் என எண்ணி "கக்கூஸில்" என்றானே பார்க்கலாம். வகுப்பே சிரிப்பில் உலுங்கியது. இக்கடியினை தற்சமயம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் டி. ராஜேந்தர் வழங்கும் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 30 மே, 2009

அனுபவம் புதிது

அம்மாஜி கோவில்.....................

நான் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரம் அம்மாஜி கோயில் என்னும் இக்கோவிலுக்குச் செல்வதுண்ட்டு. கிருஷ்ணரை வழிபடும் இக்கோவிலினுள் சாத்திரம் பார்க்கும் ஒரு அம்மா இருப்பார். அவர் இலங்கையினைப் பிறப்பிடமாகக்கொண்ட ஒரு பிராமணச் சாதியினைச் சேர்ந்தவராவார். பின்ச் மற்றும் டாப்ஸ்கோட் வழியினூடாகச் செல்லும் வழியில் அமைந்துள்ள இச்சிறிய கோவிலை அம்மாஜியின் தங்கையும் இணைந்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலிற்கு அருகாமையிலேயே Smurfit Image Pac தொழிற்சாலையும் Welfare Assistance அலுவலகமும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலிற்கு முதன் முதலில் நான் எனது தாயார் மற்றும் எனது அம்மம்மா ஆகியோருடன் சென்றேன். பெரும்பனி கொட்டிய அன்று Taxi ஒன்றினைப் பிடித்துச் சென்றோம் வரும் போது அம்மாஜியின் தங்கையார் எம்மை எம் வீடு வரை அழைத்து வந்தார். இக்கோவிலின் சிறப்பம்சம் யாதெனில் எனது சாதகக்குறிப்பினை எடுத்துப் பார்த்த அம்மாஜி எனது பிறப்பினால் என் தந்தைக்கு தோஷம் உள்ளதாக என் தந்தை இறந்ததை செய்தியைத் தெரியாது முன் கூட்டியே தெரிவித்தது எனக்கு வியப்பு அதுவே அம்மாஜி கோவிலின் சிறப்பம்சம் என்பதனை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் அம்மாஜி கூறுகையில் "பலர் பல ஏமாற்றுவித்தை தெரிந்தவர்களிடம் சாதகம் பார்க்கின்றனர், ஆனால் நான் அப்படியல்ல சாதகம்தான் பார்க்கின்றேன் பணத்தைக் கூட சாதகம் பார்க்கவந்தவர்களின் விருப்பத்திற்கேற்றவாறே வாங்குகின்றேன்" என்றும் கூறினார். நான் பிற ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தொடர்ந்து செல்வதனை வழக்கமாகக்கொண்டேன். இவ்வாறு செல்லும் நான் தினம் பல விடயங்களை அங்கு கற்றுக்கொண்டேன். பகவத் கீதை வகுப்பு மற்றும் தியான வகுப்பு போன்றனவைகள் அங்கு நடைபெறுவது என் மனதிற்கு ஆறுதலைத் தந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செல்லும் நான் அம்மாஜி கூறிய பின்வரும் தகவல்களை இங்கு பகிர்ந்து அம்மாஜி கூறினார் "என்னை ஒருமுறை ஒரு உணவகத்தில் வேலை செய்துவரும் தமிழ் இளைஞர் என்னை வந்து சந்தித்தார், தான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில் 2000ற்கும் அதிகமான பணத்தினை அவர் ஒரு சாத்திரக்ககரரிடம் பறிகொடுத்துவிட்டார். தன்னை யாரோ செய்வினை செய்ததாகக்கருதி பின்னர் அச்சாத்திரக்காரரின் பொய்யினை நம்பி ஏமாந்ததாக என்னிடம் கூறி, எனது சாத்திரக்கணிப்பினால் பயன் பெற்றார்" என அம்மாஜி பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஜனவரி் 18, 2009, 2 : 28 : 24 PM அன்று எடுக்கப்பட்ட அம்மாஜி கோவிலின் உள்தோற்றம்.

ஜனவரி 18, 2009, 2 : 34 : 28 PM அன்று எடுக்கப்பெற்ற அம்மாஜி கோவிலின் உள்தோற்றம்.

ஜனவரி 18, 2009, 2 : 14 : 46 PM அன்று அம்மாஜி கோவிலுக்கு Tapscott வழியினூடாகச் செல்லும்போது எடுத்த நிகழ்படம்.

அம்மாஜி கோவில் எனது வாழ்நாளில் ஒரு திடீர்த் திருப்பமாக ஏற்பட்ட அனுபவம் என்றால் மிகையாகாது. முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் நான் இச்சாத்திரம் பார்க்கும் இடம் போன்ற ஒரு கனவினை இக்கோவிலுக்குச் செல்லும் முன்னரே கண்டிருந்தேன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 24 மே, 2009

கேள்விப்பட்ட செய்திகள்

பெண்களின் கழிவறையினை எட்டிப்பார்த்த இஸ்லாமிய வாலிபர்.........


நான் Smurfit Image Pac தொழிற்சாலையில் வேலை பார்த்த சமயம் என்னுடன் பேருந்தில் ஒரு இஸ்லாமிய வாலிபரும் வேலைத்தளத்திற்கு வருவார். அவர் பெயர் அலி ஆகும். பிற்பகல் 3:30 மணியளவில் தொடங்கும் வேலைக்காக நான் 2 மணிக்கே செல்வது வழக்கம். இரண்டு பேருந்துகள் எடுத்து இவ்வேலைத்தளத்திற்கு செல்லும் நான் மார்க்கம் (Markham) வழியே வேலைத்தளம் அமைந்துள்ள பாஸ்மோர் (Passmore) தெருவிற்குச் செல்லும் வழியில் இவ்விஸ்லாமிய வாலிபர் தலையில் தொப்பி அணிந்து வருவார். ஒருநாள் அவரை எனது வேலைத்தளத்தில் கடமையாற்றிய Supervisor's இல் ஒருவரானவும் தமிழரானவும் சீலன் அவரை வேலைத் தளத்திலிருந்து பணிநீக்கம் செய்திருந்தார். இதற்கு என்ன காரணம் என பலரும் உரையாடிக்கொண்டிருக்கையில் பின்வரும் தகவலினைப் பெற்றேன். அத்தகவலானது: வேலைத்தளத்தில் தொழிலாளர்கள் அமர்ந்து உண்ணும் பெரிய அறையொன்றின் முன் ஆண்களுக்கும் அருகிலேயே பெண்களுக்குமான கழிவறைகள் இருந்தன, அக்கழிவறைகளின் கதவுகளின் கீழ்ப்பகுதியில் பெரிய இடைவெளிகள் அமைந்திருந்தன. பெண்களின் கழிவறைக்கதவுகளினூடாக அவ்விஸ்லாமிய வாலிபர் எட்டிப்பார்த்ததாகவும் அவரைச் சீலன் கையும் களவுமாகப் பிடித்ததுமே அத்தகவல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு பல நாட்கள் கழித்து மீண்டும் வேலைத்தளத்திற்கு வந்தார் பின்னர் அவரை சிங் என்ற Supervisor "Ali move your ass" எனவும் கூறியதை அவதானித்தேன் நான். இவ்வாறு இஸ்லாமிய மதத்தினைக் கடைபிடிப்பதாக வெளியில் காட்டிக் கொண்டு உள் மனதில் காமத்துடன் இருந்தவரை முதன் முதலில் அறிந்த காரணத்தினால் இவ்வனுபவம் என் வாழ்நாளில் ஏற்பட்ட புதிய திருப்பம். இச்சம்பவத்தினைப் பற்றி என்னுடன் பணியாற்றிய சக தொழிலாளர்களும் உரையாடிதைக் கேட்டதன் பயனாகவே அறிந்து கோண்டேன், தவிர இவையனைத்தும் உண்மையா என்பது எனக்குத் தெரியாது. இச்சம்பவத்தின்பின் அலியினை அவ்வேலைத்தளத்தில் என்னால் அவதானிக்கமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனி, 23 மே, 2009

கேள்விப்பட்ட செய்திகள்

மகளைக் காரினால் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற தந்தை..........

நான் கனடாவில் காரினால் தனது மகளையும் அவள் காதலனையும் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற தந்தை என்ற செய்தியினை இணையத்தின் மூலம் படித்தேன். அச்செய்தியில் என்ன நடந்தது என்பதனை விரிவாக அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை என்பது உண்மை. அச்செய்தியில் காரினால் ஏற்றிக் கொல்ல வந்த தந்தையின்மகள் சக மாணவன் ஒருவனை காதலித்ததாகவும் இருவரது காதலிற்கும் தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததுமாக செய்தி இருந்தது. மேலும் ஒரு நாள் மகள் காதலனுடன் சென்று மூன்று நாட்களோ நான்கு நாட்களோ வீடு திரும்பவில்லை என்பதும் அச்செய்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் தொடர்புள்ள காதலன் எனது அண்ணனது பள்ளியான Stephen Leacock CI ல் படித்த மாணவன் என்பதும் அங்கு பெரிய ரௌடித்தனம் செய்துகொண்டிருந்தவர் என்பதுமாக எனது அண்ணன் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். மேலும் நான் Smurfit Image Pac தொழிற்சாலையில் வேலை செய்த சமயம் அங்கு ஒரு இளைஞர் கூறினார் "காதலித்த பெண்ணின் வயது பயங்கரக் குறைய அதனால் தானே அவளுந்த அப்பா இப்படிச் செய்தவர்" என்று கூறினார். இச்சம்பவத்தினால் தந்தை ஆறு மாதமோ அதற்குக் கூடக் குறையவோ சிறையில் அடைக்கப்பட்டதும் உண்மையே. கனேடியச் சட்டத்தின் படி இளைஞர், இளைஞிகளை துன்புறுத்துத்துவது குற்றம். இச்சம்பவத்தில் நான் கேள்விப்பட்ட செய்திகளையும் வைத்துப் பார்க்கும் சமயம் உண்மை என்னவென்று எனக்குப் புரிந்தது.

அனுபவம் புதிது

புகையிரத வண்டி வாசலில் மயங்கி விழுந்த வயது போன கறுப்பினத்தவர்......

நேற்றைய தினம் எனது வேலத்தளத்திலிருந்து 11:30 அளவில் வீடு திரும்பினேன். கீலில் இருந்து பேருந்திலும் டான்போர்த் (Danforth) வழியாக புகையிரதத்திலும் வழமைபோல் வந்து கொண்டிருந்தேன் நான். கென்னடி (Kennedy) புகையிரத நிலையத்தில் இறங்கி ஆர். டி (R. T) புகையிரதப் பாதையில் மாறுவது வழக்கம், அதே போல கென்னடி நிலையத்திலிருந்து இறங்கிய சற்று நேரத்தில் ஒரு வயோதிபத் தோற்றம் கொண்ட கறுப்பினத்தவர் நான் வந்த புகையிரதப் பாதையில் வழுக்கியோ மயங்கியோ விழுந்தார். இதனைப் பார்த்துத் திகைத்து நின்ற நான் செய்வதறியாது நின்று வேடிக்கை பார்த்தேன். அச்சமயம் வெள்ளை இன வயது போன ஒருவர் அவரின் அருகில் சென்று என்னவென்று வினவினார். வெள்ளை இனப் பெண்மணி ஒருவரும் சென்று அவரைத் தொட்டு என்ன நடந்தது"Are you ok" என வினவினார்கள். சிலர் அவர் குடித்துவிட்டு வந்துள்ளார் என்பதாக முணுமுணுத்தனர். புகையிரம் இச்சம்பவத்தினால் நிறுத்தப்பட்டது. நான் சற்று நேரம் இதனைப் பார்த்துப் பின் என் வழியே எனது வீடு நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தேன். ஒருவர் பொது மக்கள் நடமாடும் இடத்தில் மயங்கி விழுந்ததனை என் கண்ணால் பார்த்ததனால் எனக்கு இவ்வனுபவம் புதிது.

என் கடி

வேளாளரின் தேய்ச்ச குண்டியும் கரையாரின் கழுவின குண்டியும்.........

Global Wood Custom தொழிற்சாலையில் நான் காலை நேர வேலைக்கு மாற்றம் செய்யப்பட்ட பின்னர் பலரது நட்பும் கிடைத்தது. அவர்களில் மிக முக்கியமானவர்யோகதாஸ் என்பவர் ஆவார். அவரும் நானும் பல நகைச்சுவையான கடிகளை மாற்றிக்கொள்வோம். அவரைத் தாஸ் என அழைக்கும் நான் "தாஸ், நீங்கள் என்ன சாதி ?" என வினவினேன். அதற்கு அவர் தான் கோவியர் எனும் சாதியெனவும் கூறினார். இவர் இவ்வாறு இதைச் சொல்ல தன்னை original வேளாளர் என்று புகழ்ந்து கொள்ளும் புஷ்பராஜா என்பவர் தாஸ் ஒரு வேளாளர் என்பதனையும் கூறினார். எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறு சாதிகளைப் பற்றி நானும் தாஸும் மாற்றி மாற்றி கடித்துக் கொண்டிருக்கும் வேளை ஒரு நாள் நான் "தாஸ் உங்களை வேளாளர் என புஷ்பராஜா கூறுகின்றார் ஆகையால் உங்கள் மகளை எனக்குக் கல்யாணம் கட்டித் தாங்கோவன்" என்றேன் அதற்குத் தாஸ் " உங்கள் தந்தை வேளாளரான உங்கட அம்மாவினைக் கடத்திய மாதிரி கரையார்களுக்கு வேளாளர்கள் தான் தேவையே" என கடித்தார். இதன் பிறகு பல கடிக் கலந்துரையாடல்களுக்குப் பின்னர் நான் மறு நாள் நான் கூறினேன் "தாஸ் எனது அம்மா ஒரு வேளாள இனத்தினைச் சேர்ந்தவர் எனது தந்தை கரையார் இனத்தினைச் சேர்ந்தவர் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்" எனவும் "அம்மா சொல்லுவார் வேளாளர்கள் தமது தோட்டத்திற்குள் கக்கூஸ் (மலசலம்) இருந்து விட்டு குண்டி கழுவுவதற்குப் பஞ்சியில் தோட்டத்தில் உள்ள புற்களால் துடைத்துத் தேய்ச்சுக் கொள்ளுவர் மேலும் என்னதான் கரையார் சாதி குறைந்தவர்களானாலும் கடற்கரையில் கக்கூஸ் (மலசலம்) இருந்துவிட்டு கடற்தண்ணியில் குண்டி கழுவி நல்ல decent ஆக வாழ்க்கை நடத்துவர்" என்று. தாஸின் வயிறு என் கடியினால் சற்று நேரம் குழுங்கியது.

திங்கள், 18 மே, 2009

கனவுகள்

கடையில் மயங்கி வீழும் நானும்............


நான் ஒரு கடையினுள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். அச்சமயம் நான் கடையினுள் உள்ள பெட்டியின் மேல் ஏறி நின்று பலருடன் உரையாடினேன். அங்கு வந்த இரு தமிழ்ப்பெண்கள் மற்றும் வாலிபர் ஒருவரை நான் பார்த்தேன். பின்னர் திடீரென தரையில் அலறியவாறு வீழ்ந்தேன்.இக்கனவினை இன்று மதிய நித்திரையின் போது கண்டேன். இன்று விக்டோரியா டே (Victoria day) என்ற காரணத்தினால் எனது வேலைத்தளத்தில் விடுமுறை விட்டுருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எழுதும் போது நேரம் 5:56 PM.

ஞாயிறு, 17 மே, 2009

அனுபவம் புதிது

கனடாவில் ஒரு தமிழ்ப் பிச்சைக்காரர்..............


நான் விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் பின்ச் (Finch) தெருக்களினூடாக நடந்துவந்துகொண்டிருந்த சமயம் ஒரு தமிழர் என்னையே பின்பற்றிவந்தார். நான் புலோக் ஃபஸ்டர் (Blockbuster Video) கடைக்குள் நுழைந்ததும் என்னிடம் வந்து "நீங்கள் தமிழே" என வினவினார். நானும் கூறினேன் ஆமாம் என்று.பின்னர் கேட்டார் நீங்கள் பக்கத்தில் உள்ள விடுதிக்கட்டடத்திலா குடியிருக்கின்றீர் என்று. நான் "இல்லை" என்றேன். அவர் சற்று வயது போனவர், அவரது மீசை நரைத்து இருந்தது. அன்று என்னை விட்டுச் சென்றார் அவர், ஆனால் ஒருநாள் அதே நபரை நான் எனது தாயுடன் டாலர்ஸ்டோரில் (Dollar Store) பொருட்கள் வாங்கச் செல்லும் வேளை சந்தித்தேன். அங்கு வந்த அவர் எம்மிடம் "நீங்கள் தமிழே" என வினவினார். பின்னர் "என்னட்ட பஸ் டோக்கன் (Token) இல்லை"எனவும் "சில்லறை இருக்கே" எனவும் கேட்டார். அதற்கு நான் "நீங்கள் homeless ஆ" என வினவினேன். அவர் இல்லை எனப் பதிலளித்தார். பின்னர் எனது (Purse) இலிருந்து சில்லறையை நான் கொடுக்க எத்தனித்த வேளை எனது தாயார் கொடுக்க வேண்டாம் எனத் தடுத்துவிட்டார். பின்னர் Mall ற்குள் உள்ள வால்மார்ட் (Walmart)ற்குள் நாம் சென்ற போதும் அவர் தொப்பி அணிந்து புத்தகப் பையொன்றினைச் சுமந்தவாறு எம்வழியே சென்றார். நாம் Shopping செய்ததற்குப் பின்னர் வெளியேறிய சமயம்புகை பிடித்துக் கொண்டு வெளியில் நடந்து சென்றார். பிறகு வீட்டில் வந்து யோசித்தேன் "ஆமா இவர் புகை பிடிப்பதற்குக் கையில் காசு வைத்திருக்கின்றாரே ! அக்காசினைபேருந்தில் பயணம் செய்வதற்கு வாங்கும் சீட்டினை வாங்க ஏன் உபயோகிக்கவில்லை" என்று. இவ்வாறான Welfare கொடுக்கும் கனடா நாட்டில் வாழ்ந்துகொண்டுபணத்தை வீணே செலவு செய்து பின்னர் மற்றவர்களிடம் கையேந்தும் இவர்களைப் போன்றவர்களின் குணத்தினையும் நான் அன்றிலிருந்து அறிந்து கொண்டேன். இச்சம்பவம்எனது வாழ்நாளில் ஒரு பாடமும் கனடாவில் தமிழர் பிச்சை ஏந்தி என்னிடம் வந்த புதியதொரு அனுபவமும் ஆகும்.

தினக்கருத்து

தமிழா நீ அனைவரும் ஓரினமே என உணர்த்திய வங்காளத்தினைச் சேர்ந்த ஆரியச் சிங்களவர்கள்..........

ஈழத்தில் பண்டைக் காலந்தொட்டே சாதிப் பிரிவினைகள் இருந்துவந்தது ஒரு முக்கிய விடயம். இதற்கு எடுத்துக்காட்டாக நான் Smurfit Image pac வேலைத்தளத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வேளாள இனத்தைத் தான் சேர்ந்ததாகக் கூறிக்கொண்ட ஒருவர் என்னிடம் கூறினார்.தனது தாத்தா (பாட்டானார்) காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக என, அதாவது வேளாள இனத்தினைச் சேர்ந்ததனது பாட்டனார் தன் மகன் தாழ்ந்த சாதியினனச் சேர்ந்த பெண்ணுடன் காதல் கொண்ட காரணத்தினால் வெட்டிக் கொன்றார் என்று.இதனைக் கூறியபின் தெரிந்துகொண்டேன் இலங்கையின் பல பிரதேசங்களின் இனத்துவேசம் பரம்பரை பரம்பரையாகக் கடைபிடிக்கப்பட்டு வந்துகொண்டிருந்தது என்று. அதுமட்டுமல்ல, இலங்கையில் ஆரியர்கள் மெது மெதுவாக இந்து சமயத்தினை எவ்வாறு திணித்தனரோ அதேபோன்று சிங்கள ஆரியர்கள் புத்த சமயத்தைத் திணித்து இன்று எவ்வாறு அவர்கள் சாதிகளைக் காப்பாற்ற முயல்கின்றனர் என்று. வடக்கில் இருந்து வந்த பெரும்பாலான வெண்மை நிறத்தோற்றம் கொண்ட கலிங்க நாட்டு ஆரியர்கள் எவ்வாறு தமது சிங்கள மொழியினைக் கட்டிக்காப்பாற்றுகின்றதும், இது போதாதென்று தமிழர்களுடன் பண்டைக்காலந்தொட்டே கலப்புத் திருமணம் செய்து கொண்டவுமான தமிழர்களிலேயே தம்மை உயர் சாதிகள் எனத் தமைக்கூறிக்கொள்ளும் ஜயர், வேளாளர், பண்டாரம் போன்ற பிற ஆரியர்களும் காலம் காலமாக எவ்வாறு கறுப்புத் தோலுடைய உண்மையான திராவிடத்தமிழரை ஏமாற்றி அவர்களை சிறிது சிறிதாக அழித்து ஆண்டனர் என்பதனனயும் தெரிந்து கொண்டேன். மேலும் தமிழர்களிடையே இச்சாதிப் பிரிவினைகளை உருவாக்கிய ஆரிய இனத்தவர்கள் பலதமிழர்களைப் பல வழிகள் கொன்று குவித்தார்கள். இவை இவ்வாறிருக்க சிங்களவர்கள் தம் பங்கிற்கு தமிழினத்தினை அதாவது இலங்கை மற்றும் சிந்து சமவெளிப் பகுதி அனைத்தினையும் பூர்வீக இடமாகக் கொண்ட திராவிட இனமான கருமை நிறத் தோலையுடைய தமிழ் இனத்தினை அழிக்கத் தொடங்கி தமிழர்களுக்குத் தெரிவித்தனர் "தமிழா உன்னுள் பல சாதி என்று ஒன்றும் இல்லை நாம்உன் இனம் அனைத்தினையும் அனைத்துச் சாதியினரையும் ஒரே நேரத்தில் அழிக்கப் போகின்றோம்" என்று. இச்சிங்கள ஆரியர்களின் இவ்வகையானகொஞ்சமஞ்ச புத்தியினால் தமிழர்களின் தேசியவாதம் ஆரம்பமாகியது பெருமையே!. இதனை உணர்த்திய சிங்களவர்கள் தமிழ் - ஆரியர் கலப்பினங்களான தமிழர்கள் அல்லாத வேளாள, ஜயர், பண்டாரம் போன்றவர்கள் உண்மைத் தமிழர்களிடம் அதாவது திராவிடத் தமிழர்களிடம் கொண்ட பகைதனை தீர்த்தனர் சிங்கள ஆரியர்கள் என்பதே இன்றைய வரலாறு சொல்லும் உண்மை.

அனுபவம் புதிது

கனடாவில் புகையிரத வண்டியில் கூட இந்தோ - ஜரோப்பியர்களின் இனத்துவேசம்...........

நான் Global Wood Custom வேலைத்தளத்திலிருந்து டான்ஃபோர்த் புகையிரதப் பாதையினூடாக வந்துகொண்டிருக்கும் வேளை ஒரு இனத்துவேசப் பிரச்சனையினைப்பார்த்தேன். அதாவது ஒரு வெள்ளை நிற இனத்தினைச் சேர்ந்த அம்மையார் தான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகாமையில் இருந்த இருக்கையில்தனது பொருட்களையும் சேர்த்து வைத்திருந்தார். புகையிரதம் அடுத்த தரிப்பிடத்தில் நின்ற வேளை அப்புகையிரதப் பெட்டியினுள் ஒரு கறுப்பினத்தினைச் சேர்ந்த பெண்மணி அமர முயற்சி செய்து கொண்டிருந்தார். அச்சமயம் அப்புகையிரதப் பெட்டி அதிக சனக்கூட்டத்துடன் காணப்பட்ட காரணத்தினால்அவரால் உட்கார இயலவில்லை. இதனால் வெள்ளைக்கார அம்மணி தனது பொருட்கள் வைத்திருந்த இருக்கையில் அமர எத்தனித்துச் சென்றார்.அவ்வெள்ளைக்கார அம்மையார் தனது பொருட்களை எடுக்க மறுத்தார் அதனால் பிரச்சனை ஆரம்பித்தது. கறுப்பின அம்மையாருடன் அவர் தகாத வார்த்தையான "Nigger" அதாவது "கறுப்பர்" என்னும் பொருள்படும் வார்த்தையினை உபயோகித்தார். இவ்வார்த்தையினைக் கேட்டு கறுப்பினப் பெண்மணி "Yeah I am a Mother fucking Nigger" எனக் கோபத்துடன் பதிலடி கொடுத்தார். பின்னர் வெள்ளை இன சற்று வயது போன இனத்துவேசப் பெண்மணிகூறினார் "You are a Thief" "I have the Education that is twice as you" என வதை சொற்களால் கூறினார். இதனைக் கேட்ட நான் எள்ளி நகைத்தேன்காரணம் படித்தும் இப்பெண்மணி முட்டாளாக உள்ளாரே என்று. பிறரது இருக்கையினை அதுவும் பொதுமக்கள் சொத்தினை தன்னகத்தே வைத்துக்கொண்டுஅவர் அவ்வாறான வார்த்தைகளை உபயோகித்து பேசியது பிழையென ஒரு வெள்ளைக்காரர் கூறினார் அவர் மேலும் இருக்கையினை அக்கறுப்பினப்பெண்மணிக்குக் கொடுத்து விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே எனவும் கூறினார். அச்சமயம் எனது இருக்கைக்கு அருகாமமயில் ஒரு கறுப்பின இளம் வயது மிக்க பெண்மணியும் ஒரு இள வயது வெள்ளை இனப்பெண்மணியும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பெண்மணிகள் இச்சம்பவத்தினைப் பார்த்துச் சிரித்தே விட்டனர், இந்த 21ம் நூற்றாண்டிலும் இனத்துவேசமாக அவ்வெள்ளை இனப் பெண்மணி இருப்பதை எண்ணியே அவர்கள் எள்ளி நகைத்தனர்.பின்னர் அப்பெண்மணிகளில் கறுப்பினப் பெண்மணி இருக்கை இல்லாத கறுப்பினப் பெண்மணியிடம் கூறினார் அருகாமையில் ஒரு இருக்கை இருக்கின்றது அங்கு சென்று அமருங்கள் இங்கு சண்டை செய்யாமல் என்று. அக்கறுப்பினப்பெண்மணியும் அங்கு சென்று அமர்ந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் எனது வாழ்நாளில் புககயிரத்தத்தில் ஏற்பட்ட புதிய அனுபவம்.

அனுபவம் புதிது

கால்க்கில் கஞ்சா விற்க எத்தனித்த கறுப்பின இளைஞன்..........

நான் கால்க்கில் City Adult Learning Centre (CALC) படித்த வேளை ஒரு கறுப்பின இளைஞன் என்னுடன் விஞ்ஞானப் பாட வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவன் என்னிடன் நான் தமிழ் காடையரா (Tamil Gangster) என வினவினான். நானும் ஆமாம் என்று ஒரு பொய்யினைத் தெரிவித்தேன். அதனைத் தொடர்ந்து என்னை அப்பள்ளியின் மலசலக்கூடத்தில் என்னை சந்தித்தவேளை என்னிடம் செடி போன்ற அமைப்பைப்பெற்ற கஞ்சா செடியை என்னிடம் விற்க எத்தனித்தான். நான் அவனிடம் வேண்டாம் என்று கூறி அவனிடம் "எனக்கொரு துவக்கு (Pistol) வேண்டுமெனத் தெரிவித்தேன். அவன் சொன்னான் அது 1000 ம் டாலர்களிற்கும் மேல் என்று. நான் அவ்வாறே நழுவினேன். இதுவே என் வாழ்நாளில் கஞ்ஞாவினை நேரில் பார்த்த முதல் அனுபவம்.

சனி, 2 மே, 2009

அனுபவம் புதிது

வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த பக்கத்து விடுதிக்காரர்கள்.............

நான் மற்றும் எனது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் செப்பெர்ட்டில் (Shepperd) உள்ள வீட்டிலிருந்து ஓர்ட்டன் பார்க் (Orton Park) மற்றும் லாரன்ஸ் அவெனியூ ஈஸ்ட் (Lawrence Avenue East) பகுதிக்கு அரசாங்கம் வழங்கிய விடுதிக்குத் தங்க எம்முடைய பொருட்களை எல்லாம் இடம் மாற்றம் செய்தோம். அன்று லாரன்ஸ் அவெனியூ ஈஸ்ட் பகுதியில் உள்ள அரசாங்கம் எமக்கு வழங்கிய விடுதிக்கு அருகாமையிலேயே இரு தமிழ்க் குடும்பங்கள் ஒன்று வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த ஒரு ஜயா மற்றும் அவரது மனைவி, மற்றொரு குடும்பம் எனது தாயார் வேலை செய்யும் இடத்தில் Supervisor ஆக உள்ள பவானி என்பவரின் தாயாரும் தகப்பனாரும் ஆகும். இவ்விரு குடும்பத்தில் வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த குடும்பத்தினைச் சேர்ந்த இரு மகன்களும் பலகலைக் கழகத்தில் வைத்து சக தமிழ் மாணவர்களால் காரால் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட செய்தியினை நாங்கள் இடம் மாற்றம் செய்ய வந்த நாளன்று அவ்விரு மகன்களின் தந்தை சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் கூறினார் " பகவத் கீதையில் உள்ளது போன்று எதை நீ கொண்டு வந்தாய் அதை எடுத்துச் செல்வதற்கு". என அவ்வரிகளைத் தனது மகன்களின் மரணத்தின் வலிகளை மறப்பதற்காக எம்மிடம் கூறினார். அவரது இரு மகன்களும் சாதிப் பிரச்சனையாலோ அல்லது புலிக்கொடிகளை பல்கலைக் கழகத்தில் ஒரு விழாவில் ஏற்றி வைத்த காரணத்தினாலோ கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்பது இங்கு எனக்கு விளங்கியது. அவ்விரு மகன்களின் தந்தையினைச் சந்தித்தது எனக்கு புதியதொரு அனுபவமாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேட்ட கடிகள்

உடையார் பொல்லு........

ஒரு ஊரில் உடையார் என்பார் ஒருவர் இருந்து வந்தார். தனது சொந்தக்காரர்களின் மரணச் செய்திகள் வரும்வேளைகளில் அவர்தம் பொல்லொன்றை தான் வந்திருப்பதற்கு அறிகுறியாக கொடுத்து அனுப்புவார். தான் தனது சொந்தங்களின் மரணத்திற்குச் செல்ல மாட்டார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர் இறுதியில் மரணமடையவே இறுதியில் ஊரில் சொந்தங்கள் எல்லோரும் தங்கள் வீட்டில் இருந்த பொல்லை மட்டும் அனுப்பி துக்கம் விசாரித்ததே இதில் வேடிக்கையான விடயம். இக்கடியினை தம்பிநாதன் அண்ணை எனக்குக் கூறியது கேட்டேன்.

பதிலளியுங்களேன் !