திங்கள், 22 டிசம்பர், 2008

கனவுகள்

நடனமாடும் பெண்கள்...........

நான் ஒரு வீட்டின் கூரையினால் சென்று பார்த்த பொழுது அங்கு உள்ளே தமிழ்ப் பெண்கள் இருப்பதனை அவதானித்தேன். பின்னர் அங்கு சென்று பல பொருட்களை எடுத்தேன் பின்னர் ஒரு கறுப்பின இளைஞனிடம் வினவினேன் இங்கு தமிழ்ப் பெண்கள் மற்றும் பிற இளைஞர்கள் என்ன செய்கின்றனர் என்று அவர் கூறினார் இங்கு அவர்கள் தங்குகின்றவர்கள் என்று. மேலும் நான் அக்கூரையின் வழியே நடந்து செல்ல நடன வகுப்புக்கள் நடைபெறும் சத்தம் கேட்கின்றன. ஆனாலும் கூரையில் உச்சியில் இருந்து செல்லப் பயந்து பின்னே வருகின்றேன். இதன்பின்னர் ஒரு மடம் போல் ஓலைக் கூரையினால் வேயப்பட்ட குடிசைப் பகுதிக்குச் சென்று தங்குகின்றேன். அங்கு தங்குவது மிகவும் விருப்பமாக எனக்குப் பட்டது.

வியாழன், 4 டிசம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

வெள்ளைக்காரியினைக் காதலித்த கனேடியத் தமிழ் இளைஞர்..........

உணவகம் ஒன்றில் தமிழர் துப்பரவு செய்யும் பணியில் ஈடிபட்டிருந்தார் அவர் இரசிய நாட்டினைச் சேர்ந்த வெள்ளைக்காரி  ஒருவருடன் சேர்ந்துதான் வேலை செய்வது வழக்கம். ஒரு சமயம் அவர் அப்பெண் தன்னிடம் தாராளமாகப் பழகுவதைப் பார்த்துப் பின் தன்னைக் காதல் செய்வதாக எண்ணி அவளைக் கட்டியணைத்திருக்கின்றார். கோபம் கொண்ட அவள் அவரைத் தள்ளிவிட்டு காவல்துறை அதிகாரிகளை அழைக்க எத்தனிப்பதாகக் கூறினார். பின்னர் இவ்வாறு நட்பைக் காதலாகத் தவறாக எண்ண வேண்டாம் எனவும் கூறினார். இச்செய்தியினை குலோபல் வூட் நண்பரான குபேந்திரன் எனக்குக் கூறினார்.

புதன், 3 டிசம்பர், 2008

அனுபவம் புதிது

குருவி ஒன்று என் கையில் இறந்தது.........



நான் குலோபல் வூட் கஸ்டம் தொழிற்சாலையில் நேற்று வேலைக்குச் சென்றதும் ஒரு குருவி அத்தொழிற்சாலையின் உள்ளே பறக்கத் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அங்கு வழமையாக என்னுடன் இரவு நேரங்களில் வேலை செய்து பின் காலையில் வேலை செய்யத் தொடங்கிய இளைஞன் பயந்தான். யூத மதத் தந்தை மற்றும் இஸ்லாமியத் தாயினால் உருவான பத்தொன்பது வயது இளைஞனான அவன் எனது சூப்பர்வைசர் ஆன முகமதுவிடம் சென்று சொன்னான் குருவி ஒன்று அங்கு உள்ளது என. அக்குருவியினைக் கையினால் நெரித்தும் உணவினை வாயினுள் ஓட்டியும் முகமது தீத்தினார். சிறிது வேளையின் பின்னர் கரப்பான் பூச்சியினைக் கொல்வதற்காக வைத்திருந்த மருந்தின் அருகில் அது சென்றதாகக் கூறினான். அவன் சென்ற சிறிது நேரத்தில் பின்னர் குருவியினைப் பார்க்க நான் சென்றேன். குருவி துடித்தது, பின் என் கையில் இறந்தது. என் கையில் வந்து இறப்பதற்கு அக்குருவி என்ன பாவம் செய்ததோ ஒருவேளை என் கை பட்டதனால் அக்குருவி இறந்ததோ. இது என் வாழ் நாளில் ஏற்பட்ட புதிய அனுபவம்.

பதிலளியுங்களேன் !