சனி, 2 மே, 2009

அனுபவம் புதிது

வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த பக்கத்து விடுதிக்காரர்கள்.............

நான் மற்றும் எனது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் விக்டோரியா பார்க் (Victoria Park) மற்றும் செப்பெர்ட்டில் (Shepperd) உள்ள வீட்டிலிருந்து ஓர்ட்டன் பார்க் (Orton Park) மற்றும் லாரன்ஸ் அவெனியூ ஈஸ்ட் (Lawrence Avenue East) பகுதிக்கு அரசாங்கம் வழங்கிய விடுதிக்குத் தங்க எம்முடைய பொருட்களை எல்லாம் இடம் மாற்றம் செய்தோம். அன்று லாரன்ஸ் அவெனியூ ஈஸ்ட் பகுதியில் உள்ள அரசாங்கம் எமக்கு வழங்கிய விடுதிக்கு அருகாமையிலேயே இரு தமிழ்க் குடும்பங்கள் ஒன்று வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த ஒரு ஜயா மற்றும் அவரது மனைவி, மற்றொரு குடும்பம் எனது தாயார் வேலை செய்யும் இடத்தில் Supervisor ஆக உள்ள பவானி என்பவரின் தாயாரும் தகப்பனாரும் ஆகும். இவ்விரு குடும்பத்தில் வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த குடும்பத்தினைச் சேர்ந்த இரு மகன்களும் பலகலைக் கழகத்தில் வைத்து சக தமிழ் மாணவர்களால் காரால் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட செய்தியினை நாங்கள் இடம் மாற்றம் செய்ய வந்த நாளன்று அவ்விரு மகன்களின் தந்தை சொல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர் கூறினார் " பகவத் கீதையில் உள்ளது போன்று எதை நீ கொண்டு வந்தாய் அதை எடுத்துச் செல்வதற்கு". என அவ்வரிகளைத் தனது மகன்களின் மரணத்தின் வலிகளை மறப்பதற்காக எம்மிடம் கூறினார். அவரது இரு மகன்களும் சாதிப் பிரச்சனையாலோ அல்லது புலிக்கொடிகளை பல்கலைக் கழகத்தில் ஒரு விழாவில் ஏற்றி வைத்த காரணத்தினாலோ கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்பது இங்கு எனக்கு விளங்கியது. அவ்விரு மகன்களின் தந்தையினைச் சந்தித்தது எனக்கு புதியதொரு அனுபவமாகவிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேட்ட கடிகள்

உடையார் பொல்லு........

ஒரு ஊரில் உடையார் என்பார் ஒருவர் இருந்து வந்தார். தனது சொந்தக்காரர்களின் மரணச் செய்திகள் வரும்வேளைகளில் அவர்தம் பொல்லொன்றை தான் வந்திருப்பதற்கு அறிகுறியாக கொடுத்து அனுப்புவார். தான் தனது சொந்தங்களின் மரணத்திற்குச் செல்ல மாட்டார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர் இறுதியில் மரணமடையவே இறுதியில் ஊரில் சொந்தங்கள் எல்லோரும் தங்கள் வீட்டில் இருந்த பொல்லை மட்டும் அனுப்பி துக்கம் விசாரித்ததே இதில் வேடிக்கையான விடயம். இக்கடியினை தம்பிநாதன் அண்ணை எனக்குக் கூறியது கேட்டேன்.

பதிலளியுங்களேன் !