ஞாயிறு, 24 அக்டோபர், 2010

கனவுகள்

சைகம் திரும்பி வந்தாள்............
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2010 இன்று எனது கனவினில் சைகம் வந்தாள். நான் ஒரு பாழடைந்த வீட்டினில் எனது அம்மம்மாவுடன் தங்கியிருந்தேன், அப்பொழுது மொட்டை மாடி மேலே சைகம் எட்டிப்பார்த்தாள். அவள் என்னைக் கண்டதும் சிரித்தாள், நானும் மேலே ஓடோடிச் சென்று அவளைச் சந்தித்து உரையாடினேன். அவளுடன் "இவ்வளவு காலமும் எங்கிருந்தாய், நான் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன் ! என்றெல்லாம் சொல்லி கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென அங்கு வலர்ந்து தோற்றத்தினை உடைய சிவலையான சைகத்தின் அண்ணன் காரனோ யாரோ வந்து என்னை அடித்துத் தள்ளி மொட்டைமாடியிலிருந்து கீழே விழுத்தினான். அவன் என்னை மட்டும் தாக்காமல் சைகத்தின் பாட்டியினையும் கத்தியாலோ ஏதோ கூறான ஆயுதத்தாலோ கீறிவிட்டான். இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த நான் திடீரென கனவினிலிருந்து திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்.

பதிலளியுங்களேன் !