புதன், 16 பிப்ரவரி, 2011

கனவுகள்

 பிணக்குவியல்கள்........

புதன்கிழமை, பெப்ரவரி 16, 2011, 6:48 காலை நேரப்படி இதனை எழுதுகின்றேன். நான் இன்று காலை ஒரு கோரக் கனவினைக் கண்டேன், அதாவது நானும் எனது நண்பர்களும் மருத்துவமனைக்குச் சென்று ஒரு தமிழ் வைத்தியரைச் சந்திக்கின்றோம், அவரைச் சந்தித்தபின்பு வீடு வரும்பொழுது ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தேன், உள்ளே நடந்து போகும் பாதையெங்கும் பிணங்கள் உடல் சிதறி காயங்கள் பட்டு கிடந்தன, நான் பயந்து பயந்து சத்தி எடுக்கும் கட்டத்திற்குச் சென்றும் உள்ளே நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். உள்ளே பல உடல்களின் பாகங்கள் தனித்தனியே கிடப்பதனை அவதானிக்க முடிந்தது. பிறகு யாரோ வந்து பிணங்களைக் குப்பைகளில் போட்டு எம்மை அவற்றைத் தூக்குமாறு கேட்பதனை யூகிக்கமுடிந்தது. பிணங்களில் கண்கள், முக்கிய பாகங்களினை எடுத்து பாதுகாக்கும் மருத்துவமனைதான் அந்த மருத்துவமனை என்பதனை இறுதியாக தெரிந்துகொண்டேன். இக்கனவு என் மனதினைப் பெரிதும் பாதித்தது.

பதிலளியுங்களேன் !