புதன், 9 பிப்ரவரி, 2011

கனவுகள்

கோவிலும் நிர்வாண நடன மன்றமும்......

புதன்கிழமை, பெப்ரவரி 09, 2011, காலை 6:31 மணிபோலே இதனை எழுதத் தொடங்குகின்றேன். நான் இன்று காலை ஒரு கனவினைக் கண்டேன் அதாவது நான் ஒரு இணையம் இருக்கும் அழகிய கணணி அறைக்குள் சென்றேன், அங்கு பலரும் இருந்த காரணத்தினால் சற்று நேரத்திற்குப் பிறகே அங்கு சென்று உபயோகிக்க முடிந்தது. இதற்கு முன்னர் யாரோ சொந்தக்காரருடனான சந்திப்பு ஏற்பட்டது. பெரும்பாலும் ஜீவாக்காவாகத்தான் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன். பின்னர் நான் ஒரு தமிழ் உணவுக்கடைக்கு சென்று பார்த்த பொழுது செக்ஸ் படங்களிந் விளம்பரம் போட்ட திரைப்படங்கள் விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. நான் அப்படியே நடந்து சென்று அக்கடைக்கு மறு முனையில் அமிந்திருந்த நிர்வாண நடன மன்றத்திற்கும் செலின்றேந், அங்கு பல பெண்கள் குடித்துவிட்டு ஆட்டம்போட்டுக்கொண்டி நிர்வாணமாக இல்லாது சற்று சிறிய ஆடைகளுடன் ஆடிக்கொண்டிருந்தனர். என்னை அத்தமிழ்க் கடைக்காரரே அங்கு அழைத்தும் செல்வதனை உணர்ந்தேன். பின்னர் பெரிய நீண்ட பாலத்திற்கு மேலே வெள்ளை நிறத்தாலான பெரிய கோவில் ஒன்றினை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அக்கோவிலிந் கீழே அருகாமையில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்ததனைக் காணமுடிந்தது. ஆற்றினில் ஏதோ மக்கள் அங்குமிங்கும் சுற்றித்திரிவதற்கு தண்ணீரில் ஓடும் படகு மாதிரியான ஏதோ ஒன்றும் ஓடுக்கொண்டிருந்தது.




பதிலளியுங்களேன் !