சனி, 29 ஜனவரி, 2011

தினக்கருத்து

நான் ஏன் எழுதுகின்றேன் !

இவ்வுலகில் பலரும் பலவிதமான முறையில் தமது எழுத்துக்களை வெளிப்படுத்துவர், அவர்கள் தாம் எழுதுவதற்கான காரணங்களினை வித்தியாசமான முறையில் கூறுவர். அத்தகு காரணங்களில் சிலவனவற்றினை கீழே கொடுக்கின்றேன்:

  •  சிலர் தாம் வயிற்றுப்பிழைப்புக்காக எழுதுவதாகக் கூறுவர்.
  • சிலர் தமக்கு எழுதிக்கொண்டிருக்க ஆசை, அதனால் எழுதுகின்றேன் என்பர்.
  • சிலர் தமது கருத்துக்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள தாம் எழுதுவதாகப் பதிலளிப்பர்.

நான் ஏன் எழுதுகின்றேன் என்றால், கனடாவில் எனது கருத்துக்களினைப் பகிர்ந்துகொள்ள யாரும் இலர், பலரும் அவர்தம் வேலைகளினைச் செய்ய விரும்பும் இந்நாட்டில் அனைவரும் தத்தம் வேலைகளிலேயே கவனத்தினைச் செலுத்துவர். இத்தகைய நாட்டினில் சற்று இனத்துவேசம், போட்டி ஆகியனவைகள் காணப்படும் ஒரு நாட்டில் எமது கருத்துக்கள், ஆராய்ச்சிகள் எம்மைப் போன்ற குணம் கொண்ட பிற நெஞ்சங்களும் படித்து மகிழவே நான் எழுதுகின்றேன். எனக்கு கவலை வரும்போதும், சந்தோஷம் வரும்போதும் எழுத ஆசை, எழுத்தில் எமது கவலைகளினையும், சந்தோஷங்களினையும் பிறரிடம் கொட்டித்தீர்க்க பெரிய சந்தர்ப்பம் உண்டு. அதுமட்டுமல்லாது என்னுடைய இவ்வாழ்க்கையின் அர்த்தம், நான் பிறந்த காரணம் போன்ற பலவனவற்றினால் சந்தேகக் கண்களுடன் வாழ்கின்றேன், நான் எனது எழுத்துக்களின் மூலம் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் ஏன் இவ்வாறு இருக்கின்றது, நான் காணும் கனவுகள் ஏன் இவ்வாறு இருக்கின்றது போன்றவற்றினை ஆராய்ந்தோமேயானால் உண்மை புலப்படும். எவ்வாறான உண்மையெனில் ஏன் கடவுள் என்ற ஏதோ ஒரு சக்தி எமை ஆட்டிப்படைக்கின்றது என்று. இவற்றின் உண்மை விளக்கங்களினை எடுத்துக்காட்டுகளுடன் உலகினிற்கு விளக்கிக் கூறுவதற்காகவே நான் ஒரு எழுத்தாளனாக உருவாகினேன்.

Introducing

Introducing to the world the two entertaining Professional DJ's of Toronto                  DJ NIRUBAN  DJ SOUND CRASHER

பதிலளியுங்களேன் !