ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கேள்விப்பட்ட செய்திகள்

தமிழின் மாமாவினை ஏமாற்றிய இலங்கைத் தமிழர்……
நான் காசினோவிற்குப் பலமுறை செல்லும் பொழுது தமிழின் மாமாவும் வருவதுண்டு அவர் குடித்துவிட்டு வெறித்தனத்துடந்தஅன் கதைக்கின்றார் என நான் அவரிடமே கூறுவதுமுண்டு !. ஒரு முறை அவர் கூறினார் தனக்கு கனடாவில் தெரிந்த ஒரு இலங்கைத் தமிழர் இருந்தார், அவர் தான் கனடாவிற்குப் புதிதாக வந்ததில் கஷ்டப்பட்ட பொழுது அந்த இலங்கைத் தமிழர் தான் தனக்கு வேலை எடுத்துத் தந்ததாகவும் ஆனாலும் வேலையின் பழுவிற்கு ஏற்றாற்போல சம்பளம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ஒரு முறை அந்த இலங்கைத் தமிழர் இந்தியாவில் சென்று மாட்டுப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் தான் தான் வட இந்தியாவிற்குச் சென்று அவரை விடுவித்து, அவரது மனைவிக்கு தங்கும் வசதிகள் செய்து கொடுத்து உதவியதாகத் தெரிவித்தார். மேலும் இலங்கைத் தமிழர் கனடாவிற்கு வந்த பிறகு தான் செய்த உதவிக்கு ஏற்றாற்போல பணம் கொடுக்கவில்லை எனவும் அவன் உண்மையிலேயே தன்னை ஏமாற்றியுள்ளான் எனவும் எம்மிடம் தமிழின் மாமா தெரிவித்தார். தன்னுடன் electrical engineering வேலையினைச் சேர்ந்து செய்தவர் அந்த இலங்கைத் தமிழரெனவும் மேலும் அவருடன் தான் இப்பொழுது எந்தத் தொடர்புகளும் அற்று இருப்பதாகத் தமிழின் மாமா வருத்தத்துடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சனி, 29 ஜனவரி, 2011

தினக்கருத்து

நான் ஏன் எழுதுகின்றேன் !

இவ்வுலகில் பலரும் பலவிதமான முறையில் தமது எழுத்துக்களை வெளிப்படுத்துவர், அவர்கள் தாம் எழுதுவதற்கான காரணங்களினை வித்தியாசமான முறையில் கூறுவர். அத்தகு காரணங்களில் சிலவனவற்றினை கீழே கொடுக்கின்றேன்:

  •  சிலர் தாம் வயிற்றுப்பிழைப்புக்காக எழுதுவதாகக் கூறுவர்.
  • சிலர் தமக்கு எழுதிக்கொண்டிருக்க ஆசை, அதனால் எழுதுகின்றேன் என்பர்.
  • சிலர் தமது கருத்துக்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள தாம் எழுதுவதாகப் பதிலளிப்பர்.

நான் ஏன் எழுதுகின்றேன் என்றால், கனடாவில் எனது கருத்துக்களினைப் பகிர்ந்துகொள்ள யாரும் இலர், பலரும் அவர்தம் வேலைகளினைச் செய்ய விரும்பும் இந்நாட்டில் அனைவரும் தத்தம் வேலைகளிலேயே கவனத்தினைச் செலுத்துவர். இத்தகைய நாட்டினில் சற்று இனத்துவேசம், போட்டி ஆகியனவைகள் காணப்படும் ஒரு நாட்டில் எமது கருத்துக்கள், ஆராய்ச்சிகள் எம்மைப் போன்ற குணம் கொண்ட பிற நெஞ்சங்களும் படித்து மகிழவே நான் எழுதுகின்றேன். எனக்கு கவலை வரும்போதும், சந்தோஷம் வரும்போதும் எழுத ஆசை, எழுத்தில் எமது கவலைகளினையும், சந்தோஷங்களினையும் பிறரிடம் கொட்டித்தீர்க்க பெரிய சந்தர்ப்பம் உண்டு. அதுமட்டுமல்லாது என்னுடைய இவ்வாழ்க்கையின் அர்த்தம், நான் பிறந்த காரணம் போன்ற பலவனவற்றினால் சந்தேகக் கண்களுடன் வாழ்கின்றேன், நான் எனது எழுத்துக்களின் மூலம் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களும் ஏன் இவ்வாறு இருக்கின்றது, நான் காணும் கனவுகள் ஏன் இவ்வாறு இருக்கின்றது போன்றவற்றினை ஆராய்ந்தோமேயானால் உண்மை புலப்படும். எவ்வாறான உண்மையெனில் ஏன் கடவுள் என்ற ஏதோ ஒரு சக்தி எமை ஆட்டிப்படைக்கின்றது என்று. இவற்றின் உண்மை விளக்கங்களினை எடுத்துக்காட்டுகளுடன் உலகினிற்கு விளக்கிக் கூறுவதற்காகவே நான் ஒரு எழுத்தாளனாக உருவாகினேன்.

Introducing

Introducing to the world the two entertaining Professional DJ's of Toronto                  DJ NIRUBAN  DJ SOUND CRASHER

திங்கள், 24 ஜனவரி, 2011

கனவுகள்

5000 டாலர் வீடு……….
திங்கட்கிழமை, ஜனவரி 24 6:54 ,2011 நேரம் இதனை எழுதுகின்றேன், இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன், அதில் எனது தாயார் ஒரு வீட்டு புரோக்கரிடம் பெரிய ஒரு வீட்டினை எமக்காக வாங்குவதாக. அதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர் வாங்கிய பெரிய வீட்டிற்கு வெறும் 5000 டாலர்கள் மட்டுமே கொடுத்ததனை என்னால் அவதானிக்க முடிந்தது. நான் வீடு வாங்கியதும் உள்ளே சென்று பார்த்தேன் மிகவும் அழகிய பெரிய வீடாகவிருந்தது, இப்பொழுதுதான் வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்தது என்பதனையும் சரியாக அவதானிக்க முடிந்தது.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

கனவுகள்

சைகத்துடனான விளையாட்டு……….
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23 இன்று காலை நான் நித்திரையினைவிடுத்து எழுந்து கொள்ளும் பொழுது ஒரு கனவினைக் கண்டேன், அக்கனவினில் ஒரு விடுதி அறையொன்று சுற்றவர வெளிச்சத்துடன் இருந்த அறை திறக்கப் பட்டு  அவ்விடுதிக்குள் சைகம் மற்றும் அவள்தம் தகப்பனார் மற்று பிற உறவினர்கள் பலர் அமர்ந்திருந்தனர். பின்னர் நானும் சைகமும் சேர்ந்து மைதானத்தில் பாலிவோல் விளையாட்டு ஆடினோம், சைகத்தினை நான் பார்க்கும்போது ஏதோ சொர்க்கத்தில் இருந்த அனுபவம், அவளது கனவுகள் எனது மனதினைக் கொள்ளை கொண்டு ஒரு சொர்க்க வாசல்தனிற்கு அழைத்துச் சென்றது. மிகவும் ஆனந்த களைப்பினில் சற்று நேரம் நான் ஆழ்ந்திருந்தேன். ஏனோ தெரியவில்லை. இக்கனவினை வியந்தெழுத வார்த்தைகள் இல்லை என்பேன்.

கனவுகள்

777………..
வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011 காலை நான் ஒரு கனவு கண்டேன் அதில் இஸ்லாமிய ஆசிரியரொருவர் என்னைக் கட்டிப்பிடிப்பதாகவும், மலசல கூடத்தில் நேரத்தினைப் பார்க்கும்போது 7:77 அதாவது 777 என இருந்தது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இக்கனவினைக் கண்ட வேளை பள்ளியில் நான் 68, 68, 68 என மார்க்குகளை வாங்கியிருந்ததும் அதனை நினைந்து வருந்தியதையும் ஒற்று நோக்கிப் பார்க்கலாம், இருப்பினும் நான் காசினோவில் விளையாடும் போது மூன்று 777 அப்படி விழுந்தால் ஜாக்பாட் அதுவே தான் கனவினில் வந்து என்னைப் பயமுறித்தியதோ என்னவோ எனவும் ஒற்று நோக்கிப் பார்க்க இடமுண்டு !. நான் இக்கனவினைக் கண்டதும் ஏதோ பேய்க்கனவினைத் தான் கண்டுவிட்டேன் எனப் பயந்து கணணியில் 777 இலக்கங்கள்இனைப் பரிசோதித்தபோது அது கிருத்துவ சமய முறைப்படி trinity சங்கமிக்கும் நாளோ என்னவோ எனப் போட்டிருந்தது. இதனை எழுதுவது வியாழக்கிழமை, ஜனவரி 13, 2011 காலை 6:50 மணி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23 மாலை 6:56 மணியிலும் ஆகும்.

புதன், 19 ஜனவரி, 2011

அனுபவம் புதிது

 முதல் வாகன விபத்து.......

நேற்று செவ்வாய்க்கிழமை, ஜனவரி 18, மாலை 6 மணியளவில் தமிழ் என்னை 'ஆடுகளம்' படம் பார்க்கப் போறோம் வாறியா ? எனக் கேட்டான். நானும் "சரி, வாறேன்" என்றேன். நானும் குளித்து வெளிக்கிட்டு 6 மணிக்கெல்லாம் கீழே இறங்கிப் போய்ப் பார்க்க தமிழைக் காணவில்லை, பின்னர் மேலே வந்து நிரூபனைத் தொலைபேசியில் அழைத்து "ஏண்டா தமிழ் இன்னும் வரேல்ல ?" எனக் கேட்டேன். அதற்கு அவன் " நீ கீழ இறங்கிப் போ, அவன் வந்து கொண்டிருக்கின்றான் !" என்றான். நானும் திரும்பக் கேழே இறங்கிப் போக தமிழும் தமிழின் மாமாவும் நிரூபனின் சிவத்தக் காரில் வந்திருந்தனர், நிரூபன் வந்திருக்கவில்லை. சரி எனக் கூறி நான் காரினில் பின் பக்கம் அமர்ந்துகொண்டேன், தமிழ் வாகனத்திநை எடுக்கும்போதே ஏதோ சத்தம் கேட்டது. நான் ஆரம்பித்திலேயே பயந்துவிட்டேன். ஆனாலும் தமிழ் வாகனத்தினை ஓட்டிக்கொண்டு லாரென்சு அவனியூ மற்றும் ஓர்ட்டன் பார்க் வீதியினூடே காரினைத் திருப்பி ஓர்ட்டன் பார்க் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை இரண்டு பெண்கள் சில்வர் நிற ஃபோர்ட் காரில் வந்து நாம் செல்லும் வழியின் குறுக்கே நின்றார்கள், அமது காரும் அவர்களது காரில் மோதி எமது காரிற்குப் பலத்த அடி. சற்று நேரம் தமிழ் மற்றும் தமிழின் மாமாவிடமிருந்து மூச்சைக் கூடக் கேட்கமுடியவில்லை, நானும் பயந்து போய் கார் புகைக்கின்றது எல்லாரும் வெளியில் வாங்கோ! எனக் கூறி வெளியில் இருந்தோம். காவல்துறையினருக்கு தொலைபேசியில் இரண்டு பெண்களும் அடித்துவிட்டநர், காவல்துறை அதிகாரி ஒருவர் வந்து பார்த்து report எழுதிப் பின்னர் சற்று நேரம் கேள்விகள் கேட்டு, தமிழ் கண்ணாடி போடாது வாகனத்திநை ஓட்டியதற்கு 110 டாலர்களிற்கு டிக்கட் கொடுத்த இரண்டு பெண்களுக்கு மூன்று டிக்கட்டுக்களினைக் கொடுத்தும் மாமா எம்மை அனுப்பி வைத்தார். இதுவே எனது வாழ்நாளில் நான் பார்த்த அனுபவித்த முதல் விபத்து ஆகும்.

பதிலளியுங்களேன் !