வெள்ளி, 10 அக்டோபர், 2008

கேட்ட கடிகள்

குண்டிப்பக்கத்தை முறுக்குங்கோ....

இரு தமிழர்கள் நல்ல நண்பர்கள் அவர்களுள் ஒருவருக்குத் தென்னை மரத்தில் ஏறத்தெரியும் ஆனால் இளனி பிடுங்கத் தெரியாது. ஒருவருக்கு இளனி பிடுங்கத் தெரியும் தென்னை மரத்தில் ஏறத் தெரியாது. ஆகையால் தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவரிடம் இளனி பிடுங்கத் தெரிந்தவர் கூறினார் நீ தென்னை மரத்தில் ஏறு நான் இளனி பிடுங்கும் விதத்தை உனக்குக் கூறுகின்றேன் என்று அவ்வாறே தென்னை மரத்தில் ஏறத் தெரிந்தவர் தென்னையில் ஏறினார். அப்பொழுது இளனி பிடுங்கத் தெரிந்தவர் கீழே இருந்து இளனியைத் திருப்பிவிட்டு குண்டிப்பக்கத்தை முறுக்கிவிடு என்று இதனைக் கேட்ட தென்னை ஏறத்தெரிந்தவரும் இளனியைப் பிடித்து திருப்பிவிட்டு தன் குண்டியைப் பிடித்து முறுக்கிவிட்டார். இதனால் கீழே விழுந்து நொறுங்கினார் என்பது நான் கேட்ட கடி.

பதிலளியுங்களேன் !