வியாழன், 9 ஜூன், 2011

தினக்கருத்து

கிருத்துவமதத்தவரும் கிணற்றுத் தவளைகளும்..........

 ரோன் என்னும் எனது நண்பன் (அவ்வாறு இலகுவாகக் கூறமுடியாது) இவர் இத்தாலிய அம்மம்மாவினைக் கொண்ட கனேடிய நபர் (ஒரே என்னைத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நபர்) அதாவது கதைக்கத் தொடங்கினான் என்றால் கதைத்துக்கொண்டே இருப்பான், அதுவும் பெரிய அரக்கத்தனமான குரலில். நன்றாகக் குடித்துவிட்டு வந்து அலட்டுகின்றபவனோ என்ற சந்தேகமும் எனது மனதில் வெகு நாட்களாகவே இருந்து வருவது இங்கு கூறத்தகும். இவனுடன் நான் ஒருமுறை நான் கணணி வகுப்பினில் அதாவது கிரைக் வகுப்பினில் பாடம் கற்க வேண்டிய சூழல். நாம் வழமை போல உரையாடிக்கொண்டிருக்கையில் எமது வகுப்பினில் கல்வி கற்கும் சக மாணவன் அதாவது ஒரு கறுப்பினத்தினைச் சேர்ந்த மானவர் தனது நண்பர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாகக் கூறினார், மேலும் அவர் தெரிவிக்கையில் தான் பிறந்த நாடான ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாட்டினில் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பது தவறாகக் கருதப் படுவதாகவும் அவ்வாறு ஓரினச் சேர்கையாலர்களாக இருப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப் படுவதும் வழக்கமெனவும் கூறினார், அப்பொழுது ரோன் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கெதிராகப் போவது போலச் சற்று பேச்சினை எடுத்தார், நானும் குறிக்கிட்டு கிருத்து சமயத்தவர்கள் கினற்றுத் தவளைகள் போன்றவர்கள், அதாவது கிணற்றுக்குள் இருக்கும் தவளை கிணறைத்தான் தனது உலகம் என எண்ணிக்கொண்டு வெளியே வராது உலகமே அக்கிணறுதான் என நினைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் உண்மையில் அக்கிணற்றுக்கு அப்பால் சென்று பார்க்கையில் பல கினறுகள் பல ஆறுகள், பெரும்பெரும் கடல்கள் என ஓரினச் சேர்க்கையாளர்கள், பிற மதங்கள், பிற பிற பண்பாடுகள் எனப் பல கிருத்துவ சமயத்தினை விடச் சிறந்த விடயங்கள் இருக்கின்றன எனத் தெரிவிக்கையில் ரோன் அதிர்ந்துவிட்டார். இத்தகைய கருத்தினால் நான் கிருத்துவ மதத்தினை புண்படுத்த எண்னுவதாக நினைக்கவேண்டாம், இது வேறு பல விடயங்களுக்கும் பொருந்தும்.

பதிலளியுங்களேன் !