புதன், 3 டிசம்பர், 2008

அனுபவம் புதிது

குருவி ஒன்று என் கையில் இறந்தது.........



நான் குலோபல் வூட் கஸ்டம் தொழிற்சாலையில் நேற்று வேலைக்குச் சென்றதும் ஒரு குருவி அத்தொழிற்சாலையின் உள்ளே பறக்கத் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அங்கு வழமையாக என்னுடன் இரவு நேரங்களில் வேலை செய்து பின் காலையில் வேலை செய்யத் தொடங்கிய இளைஞன் பயந்தான். யூத மதத் தந்தை மற்றும் இஸ்லாமியத் தாயினால் உருவான பத்தொன்பது வயது இளைஞனான அவன் எனது சூப்பர்வைசர் ஆன முகமதுவிடம் சென்று சொன்னான் குருவி ஒன்று அங்கு உள்ளது என. அக்குருவியினைக் கையினால் நெரித்தும் உணவினை வாயினுள் ஓட்டியும் முகமது தீத்தினார். சிறிது வேளையின் பின்னர் கரப்பான் பூச்சியினைக் கொல்வதற்காக வைத்திருந்த மருந்தின் அருகில் அது சென்றதாகக் கூறினான். அவன் சென்ற சிறிது நேரத்தில் பின்னர் குருவியினைப் பார்க்க நான் சென்றேன். குருவி துடித்தது, பின் என் கையில் இறந்தது. என் கையில் வந்து இறப்பதற்கு அக்குருவி என்ன பாவம் செய்ததோ ஒருவேளை என் கை பட்டதனால் அக்குருவி இறந்ததோ. இது என் வாழ் நாளில் ஏற்பட்ட புதிய அனுபவம்.

பதிலளியுங்களேன் !