வியாழன், 1 செப்டம்பர், 2011

கேள்விப்பட்ட செய்திகள்

மார்பகம் அறுக்கப்படும் பெண்கள்....
இன்று தற்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் நான், எனது அம்மம்மா மற்றும் எனது தாயார் ஆகியோர் உரையாடிக்கொண்டிருக்கையில் எனது அம்மம்மா சொன்னார் தான் கேள்விப்பட்டதாக "இலங்கையில் அதுவும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் பெண்கள் நடமாடும் பொழுது அவர்களைச் சூழும் குழுக்கள் மரத்தில் இருந்து தாவி இறங்கி அப்பெண்களின் மார்பகங்களை அறுப்பதாகக் கேள்விப்பட்டேன் என." நானும் யார் இவ்வாறான கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுவதெனக் கேட்க யாரோ கிரீஸ் மனிதனோ யாரோ ஒரு மனித இனக்குழுக்களோ என அம்மா பதில் தந்தார். போர் ஓய்ந்தும் தமிழ் மக்கள் இவ்வாறு அல்லல்படுவது எனக்கு மன வேதனையைத் தருகின்றது.

பதிலளியுங்களேன் !