ஞாயிறு, 7 ஜூன், 2009

கேட்ட கடிகள்

நான்காம் விசில்..............

தீயணைப்புப் படையினைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் உடலுறவு செய்யச் செல்லும் வேளை மூன்று விசில் முறையினைக் கடைபிடித்தனர். அதாவது தீயணைப்பு வேலை விசில் சத்தம் கேட்டவுடன் ஆரம்பமாகும் அஃதுபோலவே தாங்களும் தாம்பத்யம் செய்யச் செல்லும் முன்னர் மூன்று விசில் அடிப்பதனைக் கடைபிடித்தனர். அதாவது முதல் விசில் அடிக்கும் போது மனைவி ஆடைகளைக் கழற்ற வேண்டும் என்றும், இரண்டாவது விசில் அடிக்கும் வேளை கணவன் ஆடைகளைக் கழற்ற வேண்டும் என்றும், அதேபோல மூன்றாம் விசிலுக்கு உடலுறவு செய்ய ஆயத்தமாகவேண்டுமென்பதுமாக கணவன் மனைவி இருவரும் கடைபிடித்துவந்தனர். ஆனால் திடீரென ஒரு நாள் கணவன் நான்காம் விசிலை அடித்துவிட்டார். இதனைப் பார்த்த மனைவி "ஏங்க நாலாம் விசில்" என வினவ, தீயணைப்புத்தொழிலைக் கனவில் கண்டுகொண்டிருந்த கணவனும் தீயணைப்பு வண்டியில் இருக்கும் குழாய்ப் பைப்பின் நீளம் போதாது அதனை நீட்டச் சொல்ல விசில் ஒன்றை அடிக்கச் சொன்னவர், ஆனால் நிஜத்தினில் "பைப்பு (குஞ்சாமணி) நீளவில்லை அதுதான் இந்த நாலாவது விசில்" என்றாரே பார்க்கலாம் அவர் மனைவியின் வயிறும் குலுங்கியது, கனவினில் இருந்து விழித்துக்கொண்ட அவரும் எள்ளி நகையாடினார்.இக்கடியினை Global Wood Custom இல் என்னுடன் வேலைசெய்யும் தன்னை செட்டி வேளாளர் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புஸ்பராஜா கூறினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கேட்ட கடிகள்

குண்டப்பாவும் குண்டம்மாவும்..........

ஒரு ஊரில் ஒரு குண்டப்பாவும் ஒரு குண்டம்மாவும் வாழ்ந்து வந்தனராம். இருவருக்கும் பனங்காப்பணியாரம் சாப்பிடோணும் என்று ஒரே ஆசையாம். அப்ப ஒரு நாள் குண்டப்பா பனங்காய் பிடிங்குவதற்கு பனங்காய்த் தோட்டத்திற்குச் சென்றார்.அங்கு திடீரென வந்த ஒரு பேய் குண்டப்பாவினைப் பார்த்துக் கூறியதாம் "குண்டப்பா நான் உன்னைப் பிடித்துத் தின்னப் போறேன்" என்று. இதனைக் கேட்ட குண்டப்பா பயந்து நடுங்கவே பேய் கூறியது "சரி இப்ப நான் உன்னை விடுறன் ஆனால் நீ சமைத்து வைக்கும் பனங்காய்ப் பணியாரத்தில் நான்கினை எனக்கு வைக்க வேண்டும், நான் வந்து சாப்பிடுவன் என்ன" என்று கூறிச் சென்றது. குண்டப்பாவும் சரி எனத் தலையினை ஆட்டி விட்டு தேவையான பனம்பழத்தினைப் பறித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். வீட்டில் குண்டம்மா பனங்காய்ப் பணியாரத்தினைச் சுட்டு வைக்க குண்டப்பாவும், குண்டம்மாவும் உண்டனர். இறுதியாகப் பேயுக்கு வைக்க வேண்டிய நான்கு பனங்காய்ப் பணியாரங்களினை பானை ஒன்றினுள் ஒழித்து வைத்தார் குண்டப்பா. இவர் ஒழித்து வைப்பதனைப் பார்த்த குண்டம்மா, குண்டப்பாவிற்குத் தெரியாமல் அந்நான்கு பனங்காய்ப் பணியாரங்களினையும் எடுத்துத் தின்றுவிட்டார். அவ்வேளை பேயும் கதவை வந்து தட்டி "குண்டப்பா கதவைத் திற" என அலறியது. பேயின் அலறைக் கேட்ட குண்டப்பா பேயுக்கு வைத்த பனங்காய்ப் பணியாரங்களினைத் தேடினார் அவற்றைக் காணவில்லை, குண்டம்மாவும் தான் பனங்காய்ப் பணியாரத்தினை உண்டதனைக் குண்டப்பாவிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குண்டப்பா, குண்டம்மாவுடன் சேர்ந்துகொண்டு பணியாரத்தினை ஒழித்து வைத்த பெரிய பானையின் உள்ளே ஒழிந்துகொண்டார். பேய் திரும்பத்திரும்ப அலறியபடியே கதவை உடைக்க எத்தனித்தது. பேயின் செய்கைகளினால் அதிர்ச்சியுற்ற குண்டப்பா படாரென ஒரு குசுவை விட்டார். குசு விட்ட அதிர்வினால் அவர் இருந்த பானை உடைந்து வெடித்தது. பானை வெடித்த சத்தத்தினைக் கேட்ட பேய் "ஆஹா என்னை விட ஒரு பெரிய சக்தி இருக்கே" என்று சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்ததாம். இக்கடியினை யார் வாயிலாகக் கேட்டேன் என்பது எனக்குத் தெரியாது.

முடிந்தால் பதிலளியுங்கள் !

குண்டி இருப்பதனால் குசு வருகின்றதா ?!, இல்லை குசு விடுவதற்காக குண்டி உள்ளதா ?!.

பதிலளியுங்களேன் !