புதன், 31 ஆகஸ்ட், 2011

கனவுகள்


மூன்று கனவுகள் ஒரு வேளையிலே.......

இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அதில் நான் புகையிரத நிலையமொன்றினூடாகா நடந்து சென்றுகொண்டிருக்கையில் ஆங்காங்கே இரண்டு டாலர் நானயம் மற்றும் ஒரு டாலர் நாணயம் போன்றனவைகளைப் பார்த்துப் பார்த்துப் பொறுக்கினேன். நானும் அவ்வாறு பொறுக்கிக்கொன்டிருக்கையில் அருகாமையிலேயே ஒரு புகையிரத வண்டி சென்றது. நல்லவேலை அது என்னை இடிக்காமல் சென்றது. நானும் மெது மெதுவாக இங்கால்பல்லம் நடந்து வந்தேன், திடீரென ஒரு கணணிகள் சூழ்ந்த அறைக்குள் சென்று சேர்ந்தேன். அது வட்ட வடிவமான தோற்றத்தினைக் கொண்டிருந்தது. நானும் அவ்விடத்தில் உள்ள படியினில் ஏறி மேலே செல்ல எத்தனித்த போது ஒரு அறைக்குள் மட்டும் என்னால் செல்ல இயலவில்லை. நானும் ஏன் அவ்வாறு செல்ல முடியவில்லை என நினைத்துக்கொண்டிருக்கையில் நான் திடீரென ஒரு பேருந்தில் இருந்து வெளியில் பார்க்கின்றேன், அப்பொழுது அங்கே ஒரு அழகிய ஆரியப்பெண்னொருவர் நான் அவளைப் பார்த்துக்கொண்டிருக வெட்கத்தில் ஓடினாள். நானும் கனவினில் இருந்து விழித்துக்கொண்டேன். 

பதிலளியுங்களேன் !