வெள்ளி, 3 மார்ச், 2017

தினக்கருத்து

ஈழத்தின் இந்நிலைமையும் அதன் காரணங்களும்.....

ஈழத்தினை நோக்கியும் அதன் பிரச்சனைகளினை நோக்கியும் பலரும் பலவாறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். ஈழத்தின் பிரச்சனைக்களுக்கும் இலங்கைத் தமிழர்களினை சிங்களவர்கள் கொடுமைப்படுத்தியதே முக்கிய காரணமெனவும் , பெரும்பான்மையாக வாழும் சிங்களவர்கள் அதாவது நான் வாழும் கனடா நாட்டினில் பெரும்பான்மையாக வெள்ளையினம் வாழுகின்றது அவ்வினம் சிறுபான்மையான பிற இனங்களினையும் அடக்கி ஒடுக்கி பிற இனப் பெண்களினை உயர்பதிவில் கொடுத்து அவர்களினை வப்பாட்டியாக்கிக்கொண்டு வாழ்ந்து பிற ஆண்களை அழித்துக் கொன்று குவித்து வாழுவது போன்று .(செவ்விந்திய இனமுதல் உலகின் பல இனங்களும் இவ்வாறு அழிக்கப்பெற்று சான்றுகளும் அழிக்கப்பெற்று. இன்று ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்கள் சர்வ சாதாரணமாக அழிக்கப்படுவதுவும் போன்று) சிங்களவர்கள் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வாழுவதே முக்கிய காரணமெனவும் பலரும் கூறுவர், சிலர் இவற்றிற்கு பிரபாகரன் 1983 இல் சில இலங்கை இராவணுவத்தினை கொன்றதன் பின்னரே மிகப்பெரிதாக ஆனதெனவும் ஜூலைக் கலவரமும் இதனாலேயே ஆரம்பித்ததெனவும் கருதுவர், பலர் பண்டைக்காலந்தொட்டே இருந்துவந்த தமிழர் சிங்களவர் பிரச்சனைதான் தொடர்ந்தும் இருந்து இன்று இனக்கலவரமாக வெடித்து 2009 ஆமாண்டில் இறுதிப் போரும் நடந்து பல அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களும் கொன்று குவிக்கப்பட்டதும் இவர்களிடையே இருந்துவந்த பண்டைய கால வேறுபாடுகளாகுமென  கூறுவர். என்னைப்பொறுத்தமட்டில்  இலங்கையில் ஏற்படும் அனைத்து சண்டைகள், போர்கள் யாவும் நிரோஜனின் "அமைக்கப்பெற்ற பாதை" யே (N.A.P.(t)) காரணமென அடித்து உறுதியாகக் கூற முடிகின்றது. இவ்வுலகில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களிற்கும் இத்தகு விதியே காரணமென்பது எனது தனிப்பட்ட கருத்தே... 

பலகலை வல்லவன் !



 பச்சோந்தி போன்று நிறம் மாறும் உன் வடிவம்
மந்தி என்று பாரம் தூக்கும் படத்தின் கதாபாத்திரம்
காந்தி அன்று கூறும் இந்தியனும் தான் நீயாம்
பாத்தி நின்று கட்டும் விருமாண்டியும் ஏன் பொய்யாகும்
சாதி ஒன்று வேண்டாம் என்றும் கூறியவுன் வாக்கும் செல்லுபடியாகும்...

யாரிவர்.........(e-mail ur answers to me nirojansakthivel66@gmail.com}

பதிலளியுங்களேன் !