செவ்வாய், 7 அக்டோபர், 2008

கனவுகள்

மலைக்கோட்டைக் கோவில்தானோ !

நான் ஒரு விடுதியி்ல் தங்கித் தொலைக்காட்சி பாரத்தவாறு இருந்தேன் அவ்விடுதியில் மேல் ஒரு வங்கியோ பணி அலுவலகமோ இருப்பதனை உணர்ந்தேன். பின்னர் ஊர்தியில் பயணம் செய்யும் பொழுது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் சுவர் போன்ற தோற்றம் கொண்ட கோவிலைப் பார்த்தவாறே செல்கின்றேன். மலை இருக்கவில்லை ஆனால் அச்சுவர் அமைந்த கோவிலை மட்டும் கண்களால் கண்டது உண்மை. இக்கனவு இன்று காலை என்னால் காணப்பட்டது.

பதிலளியுங்களேன் !