ஞாயிறு, 30 நவம்பர், 2008

அனுபவம் புதிது

கணவனை விடுத்து தர்சனுடன் ஓடிய கனேடியத் தமிழ்ப் பெண்.........................

நான் Smurfit - Image pac நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த வேளை அங்கு ஒவ்வொரு Line ற்கும் ஒரு Leader இருப்பார் அவ்வாறு இருந்த தர்சனுடன் இலங்கையில் இருந்து அண்மையில் வந்த பெண்மணி தன் கணவனை விடுத்து ஓடினார் இவை எனது வாழ்க்கையில் உண்மையில் முதன்முறையில் ஏற்பட்ட அனுபவம். ஏனெனில் இவ்வாறு தமிழ்ப் பெண்கள் கணவனை விடுத்து வேறொருவருடன் ஓடிய செய்திகள் திரைப்படங்களில் பார்த்ததுண்டு ஆனால் நேரடியாகக் காணவில்லை ஆகையால் இச்சம்பவம் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய அனுபவம் என நான் நினைக்கின்றேன்.

சனி, 29 நவம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பாலியல் திரைப்படத்தில் நடிக்கவிருந்த தமிழீழத்தினைச் சேர்ந்த பெண்..................................

என்னுடைய குலோபல் வூட் நண்பர் கூறினார் "சுவிட்சர்லாந்தில் தமிழீழத்தினை அதாவது இலங்கையினைச் சேர்ந்த இளம் தமிழ்ப்பெண் ஒருவர் இணையத்தளம் மூலம் ஒரு வயது போன வெள்ளை இனத்தவருடன் அன்றாடம் உரையாடியுள்ளார் என்று. அது மட்டுமல்லாமல் அவ்வெள்ளையன் பெண்களை வைத்துப் பாலியற் திரைப்படங்கள் எடுப்பவன் என்றும் தமிழ்ப்பெண் இணையம் மூலம் அவனைப் பற்றித் தெரிந்துகொண்டு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார் என்றும் எனது நண்பர் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது அப்பெண்ணின் வீட்டார் எவ்வளவு தேடியும் அவளைக் காணவில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் முறையிடவே அவர்கள் அவள் உபயோகம் செய்த கணணியில் அவர் Chat பண்ணியதை வைத்து எங்கு சென்றிருக்க முடியும் என்று யூகித்து அவ்வெள்ளைக்கார வயோதிபனிடமிருந்து அவளை அழைத்து வந்தனர். பின்னர் அவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுப்பப்பட்டு கல்வி கற்றார் என்பது அனைத்தும் எனது Global Wood Custom நிறுவன நண்பரால் சொல்லக் கேள்விப்பட்ட செய்திகளே! உண்மையா என்பது எனக்குத் தெரியாது.

செவ்வாய், 25 நவம்பர், 2008

அனுபவம் புதிது

யேசுநாதர் காப்பாற்றிய தகவல்..........
இன்று அதிகாலை நான் வேலைத்தளத்திலிருந்து பேருந்தில் செப்பர்ட் அவெனியூவால் (Sheppard Avenue) வரும் வேளை பேருந்தில் இருந்த கறுப்பின இளைஞன் ஒருவன் என்னிடம் வந்து கை காட்டி தான் நான்கு வருடங்களுக்கு முன்னரோ பின்ச் (Finch) மற்றும் நெல்சன் (Neilson)சாலையோரத்தில் சுடப்பட்டதாகவும் யேசு நாதர் தன்னைக் காப்பாற்றியதாகவும் கூறிச் சென்றார்.

தினம் ஒரு பாடல்

கட்டிக்கொள்ளவா - வாழ்க்கை

கவர்ச்சிகரமான உல்லாசப் பாடல்.

சனி, 22 நவம்பர், 2008

தினக்கருத்து

தமிழ்த் திரைப்படத்துறையும் தமிழ் இதழ்களும்..........

இன்று தமிழ் இதழ்களில் வரும் செய்திகளானது வெறுமனே செய்திகள் அன்று தமிழர்களது வரலாற்று விழுமியங்களையும் அவர்கள் பழக்க வழக்கங்கள் எனப்பல உண்மைகளினனயும் உள்ளடக்கியதாக வருகின்றது. இவ்வாறு தமிழ் மொழிப் பற்றாளர்களினால் வெளிவரும் இவ்விதழ்களினால் தமிழ் மொழி வளர்க்கப்படுகின்றது, பண்பாடுகள் பேணப்படுகின்றன. இத்தகு இதழ்களின் மூலம் வருங்கால சந்ததியினர் தமது மூதாதையர் எவ்வாறான வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டிருந்தனர் என்பதனை அறிய இயலும். தமிழ்த் திரைத்துறையினரால் தமிழர்களின் வரலாறுகள் பதியப்படும்போது அதாவது பண்டைக்காலத்தமிழகத்தில் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டவாறு திரையில் வரலாறுகள் எழுதப்படும்பொழுது தமிழ் இதழ்களிலிருந்தும் வரலாறுகள் பெறப்படும். எனவே இதழ்கள் நாளைய வரலாற்றுத் திரைப்படங்களிற்கு ஒரு சாட்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினைப் படிப்பது என்பது தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையினை விளங்கிக்கொள்ள முடியுமான ஒரு சிறந்த முயற்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினை நடாத்துபவர்கள் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிக்காக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கல்ல. இன்றைய இதழ்கள் பல மேற்கத்தேய மோகங்களினை கொண்டு உருவாகுவது பண்பாட்டுச் சீரழிப்பிற்கு இட்டுச் செல்கின்றது குறிப்பிடத்தக்கது. எனவே உலகின் பல பாகங்களிலும் இயங்கும் தமிழ் இதழ்கள் அனனத்தும் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவவ எனது தனிப்பட்டக்கருத்தே!.

தினம் ஒரு பாடல்


கடவுள் பாதி மிருகம் பாதி - ஆளவந்தான்

இப்பாடல் வரிகளால் தினம் புத்துயிர் பெறலாம் சோம்பேறிகள் கூட.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

தினம் ஒரு பாடல்



ஆலப்போல் - எஜமான்

இப்பாடலைக் கேட்கும்பொழுது வரும் மெட்டானது காற்றில் இருந்து வரும் சத்தம்போலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 15 நவம்பர், 2008

தினக்கருத்து

காமத்தில் மூழ்கியவர் பிறர் அழகை நோக்குவர்...........

என்னுடன் குலோபன் வூட் கஸ்டம் (Global Wood Custom) நிறுவனத்தில் பணிபுரிவர்களில் பத்தொன்பது வயதுமிக்க ஒருவன் வேலி செய்கின்றான். அவனது தாயார் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்பதும் தந்தையார் யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் ஏழு குழந்தைகள் தனது பெற்றோருக்கு என்பதும் அவர் வாயினால் நான் சொல்லக்கேட்டதாகும். மேலும் காமமா காதலா சிறந்தது என்றொரு வாதத்தினை அவருடன் உரையாடினேன் அவர் கூறினார் மக்கள் அழகுள்ளவராக இருப்பதே நன்று என்று நான் கூறினேன் காமத்தில் மூழ்கியவர்கள் தான் பிறர் உடலழகினையும் அகத்தின் அழகினையும் பார்ப்பர் என்று. அதற்கு அவர் தனது கருத்தான காமமும் காதலும் ஒன்று என்பதனை நிரூபிக்க முற்பட்டார் அவ்வேளை நான் கூறினேன் ''உமது தாய் சிறிதளவு உடற்பருமனாக இருந்தால் நீர் உமது தாயின் மீது வெறுப்புச் செலுத்தப்போகின்றீரா'' அவர் மேலும் தெரிவித்தார் தாயிடம் செலுத்துவது அன்பு என்றும், காதலும் காமமும் ஒன்று எனவும் தெரிவிக்க முற்பட்டார். அவரிடம் கேட்டேன் ''நீர் ஒரு மருத்துவரானால் நோயாளிகளிடம் அழகைப்பார்த்தா அல்லது அவர்களது நிறத்தைப் பார்த்தா மருந்து கொடுப்பீர் அல்லது அவர்களைப் பரிசோதிப்பீர் ?'' , அதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. பின்னர் தமிழ் நண்பரின் சீருந்தில் பயணம் செய்த வேளை அவரிடம் கேட்டேன் ''உமக்கு ஒரு காதலி இருக்கின்றார் என்று வைப்போம் அவர் விபத்தில் சிக்கி அவர் முகம் கோணலாகினால் அவரது முகத்தின் அழகினை வைத்து வெறுப்பீரா இல்லை அன்பு செலுத்திக் காதல் செய்வீரா! '' , அவரிடம் இருந்து எந்தவொரு பதிலையும் நான் கேட்கவில்லை. இதனால் எனது தனிப்பட்டக்கருத்து என்னவென்றால் காமத்தில் மூழ்கியவரே பிறரிடத்தில் அழகை நோக்குவர். அழகை நோக்காமல் பிறர் மனத்தின் அழகினை நோக்குபவரே சிறந்த மனிதர். இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே .

பதிலளியுங்களேன் !