சனி, 23 மே, 2009

என் கடி

வேளாளரின் தேய்ச்ச குண்டியும் கரையாரின் கழுவின குண்டியும்.........

Global Wood Custom தொழிற்சாலையில் நான் காலை நேர வேலைக்கு மாற்றம் செய்யப்பட்ட பின்னர் பலரது நட்பும் கிடைத்தது. அவர்களில் மிக முக்கியமானவர்யோகதாஸ் என்பவர் ஆவார். அவரும் நானும் பல நகைச்சுவையான கடிகளை மாற்றிக்கொள்வோம். அவரைத் தாஸ் என அழைக்கும் நான் "தாஸ், நீங்கள் என்ன சாதி ?" என வினவினேன். அதற்கு அவர் தான் கோவியர் எனும் சாதியெனவும் கூறினார். இவர் இவ்வாறு இதைச் சொல்ல தன்னை original வேளாளர் என்று புகழ்ந்து கொள்ளும் புஷ்பராஜா என்பவர் தாஸ் ஒரு வேளாளர் என்பதனையும் கூறினார். எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறு சாதிகளைப் பற்றி நானும் தாஸும் மாற்றி மாற்றி கடித்துக் கொண்டிருக்கும் வேளை ஒரு நாள் நான் "தாஸ் உங்களை வேளாளர் என புஷ்பராஜா கூறுகின்றார் ஆகையால் உங்கள் மகளை எனக்குக் கல்யாணம் கட்டித் தாங்கோவன்" என்றேன் அதற்குத் தாஸ் " உங்கள் தந்தை வேளாளரான உங்கட அம்மாவினைக் கடத்திய மாதிரி கரையார்களுக்கு வேளாளர்கள் தான் தேவையே" என கடித்தார். இதன் பிறகு பல கடிக் கலந்துரையாடல்களுக்குப் பின்னர் நான் மறு நாள் நான் கூறினேன் "தாஸ் எனது அம்மா ஒரு வேளாள இனத்தினைச் சேர்ந்தவர் எனது தந்தை கரையார் இனத்தினைச் சேர்ந்தவர் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்" எனவும் "அம்மா சொல்லுவார் வேளாளர்கள் தமது தோட்டத்திற்குள் கக்கூஸ் (மலசலம்) இருந்து விட்டு குண்டி கழுவுவதற்குப் பஞ்சியில் தோட்டத்தில் உள்ள புற்களால் துடைத்துத் தேய்ச்சுக் கொள்ளுவர் மேலும் என்னதான் கரையார் சாதி குறைந்தவர்களானாலும் கடற்கரையில் கக்கூஸ் (மலசலம்) இருந்துவிட்டு கடற்தண்ணியில் குண்டி கழுவி நல்ல decent ஆக வாழ்க்கை நடத்துவர்" என்று. தாஸின் வயிறு என் கடியினால் சற்று நேரம் குழுங்கியது.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !