ஞாயிறு, 7 நவம்பர், 2010

கேள்விப்பட்ட செய்திகள்

தீயோர் தப்பிப்பதுவும், நல்லோர் துன்பப்படுவதுவும்...........

போன வெள்ளிக்கிழமையோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ என நினைக்கின்றேன் ஒரு தொலைபேசி வந்தது, அதில் வந்த குரல் என்னுடன் biology வகுப்பினில் CALC இனில் கல்விகற்ற பாகிஸ்தானிய இஸ்லாமியப் பெடியனின் குரல் போன்றதொரு குரல் வந்தது, நானும் அவன் தான் என சுதந்திரமாகச் சற்று நேரம் கதைத்தேன் பின்புதான் தெரிந்தது அந்தக்குரல் கென் என்ற கிருஸ்துவ சமயத் தமிழ் நபர் என்று. அவர் நான் விக்டோரியா பார்க் மற்றும் செப்பர்ட் அவெனியூவில் இருந்த காலத்தில் என்னிடம் கிருத்துவ சமயப் போதகம் செய்ய வந்தவர், இவர் மோர்மன் Mormon பிரிவினைச் சேர்ந்தவர். இவர் தான் அன்று தொலைபேசியில் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார். அவர் என்னை நலம் விசாரித்து எனது தாயார் வேலை செய்கின்றாரா எனக் கேட்டு அவருடன் உரையாடினார். எனது தாயாருடன் உரையாடும் போது அவர் தான் அறிந்த சம்பவம் ஒன்றினை எனது தாயாருக்குத் தெரிவித்தார், அதாவது இரு பணக்காரத் தமிழ் இளைஞர்களின் தீய நண்பர்கள் அப்பெடியன்களின் வாகனத்தினுள் கஞ்சாவினை மறைத்து வைத்தநர் எனவும் பின்னர் காவல்துறையினர் அப்பாவி இளைஞர்களை கைது செய்து பின் உடனடியாக Deport பண்ணிவிட்டனர். இச்சம்பவம் உண்மையாக நிகழ்ந்ததாக கென் கூறினார் என எனது தாயார் என்னிடம் கூறினார். இச்சம்பவம் போல பல இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கனடா நாட்டினில் வீண் பழி சுமத்தப்படுவதும் தாம் செய்யாத குற்றங்களிற்காக கைது செய்யப்படுவதும் கூடிக்கொண்டே வருவதும் தவறுகள் செய்பவர்கள் தப்பிப்பதுவும் கனடா போன்ற இனத்துவேசம் பிடித்த நாட்டில் அதிகரிப்பது ஒன்றும் பெரிதல்ல....

பதிலளியுங்களேன் !