சனி, 4 மார்ச், 2017

தினக்கருத்து

பூமியினை விட்டு பல பூமி.....
இன்று பூமி ஒரு சிறிய கிராமமாக கணனி மூலம் வந்துள்ளது சந்தோஷம் இருப்பினும் இதனையும் தாண்டி வேறொரு எங்கோ பிரபஞ்சத்தில் இருக்கும் என்னப்போல் ஒருவர் இவ்வாறு தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்து ஒரு தாய் மொழி அழியாதிருக்க இவ்வாறு பிளாகரில் எழுதி வரலாறுகளை சேமித்து வருங்காலச்சந்ததியினர் வந்து அறிந்து கொள்வதற்கு அழகிய தமிழில் எழுதிக்கொண்டிருப்பார் என நினைக்க முடியாது ஆனாலும் வேறொரு மொழியில் கணனி போன்று வேறொரு கருவியினை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க வாய்ப்புக்கள்  அதிகமே. பில்லியன்கணக்கில் இப்பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பூமிகள் , கோள்கள் இருக்கும் வேளையில் அனைத்தும் சாத்தியமே. ஆனாலும் வேறொரு பூமி எம்பூமி போன்றிருந்தால் அது மிகவும் நன்றே. இன்னும் 20,000 வருடங்களிற்குப் பிறகு இதனை வந்து வாசிக்கும் வேற்றுக்கிரகவாசியும் இதனைப் படித்து எம்பூமியில் 20,000 ஆயிரம் வருடத்திற்கு முன்னர் என்னைப் போல் ஒருத்தன் பூமியில் உள்ள அனைவராலும் கிறுக்கனாக் கருதப்பட்ட நிரோஜன் என்பவர் எழுதியிதாக அறிந்து உண்மையினைத் தெரிந்து கொண்டால் அதுவும் எனக்கும், தமிழ் மொழிக்கும் பெருமையே ஏனெனில் 20,000 ஆயிரம் வருடத்திற்குப் பிறகும் தமிழ் மொழி இருந்திருந்தால் எனது பிளாகர் இருந்திருந்தால் எவ்வளவு நன்று. இவை அனைத்தும் எனது கருத்துக்களே !.

பதிலளியுங்களேன் !