வியாழன், 28 அக்டோபர், 2010

கனவுகள்

இந்தியாவில் தீவிரவாதிகள்……….
எழுதுவது வியாழக்கிழமை, அக்டோபர் 28, காலை 6:25 மணியளவு, இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன் அதாவது தீவிரவாதிகள் எனக்கு முன்னால் கட்டிடம் ஒன்றினில் ஏறி நின்று தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள், அப்பொழுது ஒரு தீவிரவாதி சூடு வாங்கி என் அருகில் விழுகின்றான் இன்னொருமுறையும் அவன் சூடு வாங்குகின்றான். இம்முறை என் பக்கத்திலிருந்து குண்டுகள் அவனைத் துளைக்கின்றன. நான் வீடியோ எடுப்பவனோ அல்லது காவல்துறையினைச் சேர்ந்தவனென்பவனோ தெரியவில்லை. நான் இவற்றையெல்லாம் மிக அருகிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்தது மட்டும் புலம்புகின்றது. இச்சம்பவம் நடைபெறும் இடம் இந்தியாவாகப் புலப்படுகின்றது ஆனாலும் சரியாகக் கூற முடியாத நேரம்.

பதிலளியுங்களேன் !