சனி, 26 பிப்ரவரி, 2011

கனவுகள்


எம். ஜி. ஆரின் சந்திப்பு.......
சனிக்கிழமை, பெப்ரவரி 26, 2011 அன்று காலை 9:16 மணிக்கு இதனை எழுதிகின்றேன். இன்று காலை நான் ஒரு கனவினைக் கண்டேன் அக்கனவினில் நான், மற்றும் யாரோ கயானக்காரரின் குழந்தையுடனும் அவர்கள் குடும்பத்துடனும் கடைகளிற்கெல்லாம் ஏறி விளையாட்டுச் சாமான்களினை வாங்கிக் கொண்டிருந்தேன். திடீரென நான் மற்றும் தம்பிநாதன் அண்ணை அவர்களின் தோழர்கள் போன்ற யாரோ ஒருவர்களின் உணவகத்திற்குச் சென்றேன். அவ்வுணவகம் கிருத்துவ உணவகம் போன்றிருந்தது. நிரூபனும் எனக்கருகாமையில் அமர்ந்திருந்தான். அவ்வுணவகத்தில் பெரிய திரை பொருத்திய தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது, உணவகம் சற்றுப் பழமையானதானதொரு தோற்றத்தினை எனக்குக் கொடுத்தது. நான் உணவினை உட்கொள்ளும்போது எனதருகில் ஒரு வயது போன அம்மையார் வந்து அமர்ந்துகொண்டு நிரூபனின் சாப்பாட்டினில் இருந்து கொஞ்சம் எடுத்து சாப்பிட்டார். நானும் வேடிக்கையுடனும், பயத்துடனும் அக்கிழவியினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் எனது கனவினில் எம். ஜி. ஆர் தோன்றி ஈழத்துத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமான நிலையில் படுகொலை செய்யப் பட்டிருந்ததனை எனக்குக் காட்டினார், மேலும் அசரீதி ஒன்று என்னிடம் ஜனநாயகம் தான் இவ்வன்முறைகளிற்கெல்லாம் ஒரே தீர்வு எனக் கூறியது.

பதிலளியுங்களேன் !