திங்கள், 29 செப்டம்பர், 2008

தினம் ஒரு பாடல்

ஓ வந்தது பெண்ணா - அவள் வருவாளா

நல்ல பாடல் இதன் காட்சியமைப்புக்கள் மிக எளியதாகவும் காதலர்களுக்கு இனியதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேள்விப்பட்ட செய்திகள்


கனடாவில் ஷோபிகா கடத்தப்பட்டார்.....

எனது அம்மம்மா வழியில் சொந்தக்காரரான குஞ்சுபபா என அழைக்கப்படும் ரஞ்சினி கனடாவில் வசிக்கின்றார் அவர் தனது தாயான பெரியக்கா என அழைக்கப்படும் பரமேஸ்வரியுடனும் கணவர் யோகேந்திரனுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மூன்று புதல்வியர் மூத்தவர் நிரோஜிகா, இளையவர் பெயர் ஆத்மி. ஆத்மிக்கும் வயதில் மூத்தவர் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ஆசிரியருக்குப் படித்துக்கொண்டிருந்தார் அவர் பெயர் ஷோபிகா. இவரை சுமனா என்பவரின் கணவரின் தம்பியான தமிழ் இளைஞர் ஒருவர் காதலித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை அதாவது செப்டம்பர் இருபத்தைந்தாம் திகதி வீட்டில் வந்து கடத்தப்பட்டார்.இதனைக்கேள்விப்பட்ட குஞ்சுபபாக்காவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியினன எனது அம்மம்மாவான இரத்தினேஸ்வரி கூறினார்.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

மூளைக் கிறுக்கல்கள்

அழகென்ன மயிலிறகென்ன காமத்தின் மயக்கம் வரைக்கும் தானேயென்பேன்!
மனதென்ன மொழியழகென்ன வாழ்வின் இறுதி வரைக்கும் தானேயென்பேன்!

விழியென்ன விண்ணோக்கும் பார்வையென்ன அரசகுல மனிதனென்பேன்!
கவியென்ன மெய்ப்பொருள் விளங்கும் ஞானமென்ன அவன் தெய்வமென்பேன்!

வாழ்வென்ன மனதின் மோகமென்ன இறுதி இறப்பென்பேன்!
வாழ்ந்தவன் அவன் வாழ்வு கவியினால் மூழ்கியவன் வாழ்பவன் என்பேன்!


கேள்விப்பட்ட செய்திகள்

கனடாவில் இந்தியத் தமிழ்ப் பெண்ணொருவர்.................................

நான் தற்சமயம் குலோபல் வூட் தொழிற்சாலையில் பணிபுரிகின்றேன். பணிபுரியும் தொழிற்சாலையில் பல தமிழர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுள் ஒருவர் வழமையாக நான் பணிமுடிந்து செல்லும் பொழுது தனது ஊர்தியில் என்னை அழத்து வருவார் அவர் ஒரு இலங்கைத் தமிழரே என்னைப் போல அவர் கூறினார் தனது நண்பன் ஒருவன் கனடாவின் தலைநகரான டொறொன்ரோவின் டவுண்டவுன் பகுதியினுள் சென்ற போது இந்தியத் தமிழில் உரையாடும் பெண்ணொருவர் தன்னை அணுகியதாகவும் பின்னர் தனக்குப் பிடித்த போதைப்பொருளைக் கொண்டுவந்து சேர்த்தால் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு அனுமதிப்பதாகவும் கூறியதாக தனது நண்பர் கூறினார் என என்னை அழைத்து செல்லும் நபர் என்னிடம் கூறினார். மேலும் அப்பெண் மிகவும் அழகிய தோற்றம் கொண்டவர் என்பதனையும், தலையினில் பொட்டு வைத்திருந்தார் எனவும் என்னிடம் கூறினார். நான் நினைக்கின்றேன் அழகிய தோற்றம் கொண்ட பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் உயர்சாதியினைச் சேர்ந்தவர்களாகவும் ஆரியத்தமிழ்க் கலப்பினால் உருவாகியிருக்கலாம் எனவும் நினைக்கின்றேன். இது நான் கேள்விப்பட்ட செய்தியே உண்மையா என்பதை நான் கண்கூடாகக் காணவில்லை. பெரும்பாலான இலங்கைத் தமிழில் உரையாடும் தமிழ்ப் பெண்கள் கனடாவில் உளனர். அவர்கள் உரையாடுவது பெரும்பாலும் இந்தியத் தமிழ்தான் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தினக்கருத்து

இந்தியத் திரைப்படத்துறையும் வெளிநாடுகளின் திரைப்படத்துறையும்.

இந்தியத் திரைப்பட இயக்குனர்கள் மிகப்பெரும் புத்திசாலிகள் ஏனெனில் வரலாற்றினை எவருக்கும் தெரியாதவாறு மசாலாக் கலவைகளுடன் அதாவது பாட்டு, நடனம், நகைச்சுவை எனக் கலந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலே உள்ள திரைப்படத்தினுள் புகுத்துவது அவர்களின் சாமர்த்தியம். வெளிநாட்டு இயக்குநர்கள் பெரும்பாலும் தமது கற்பனைகளைப் பல கோடிகள் செலவு செய்து திரைப்படத்தினை ஆகக்குறைந்த மணிநேரங்களில் எடுப்பது சிறிது வேடிக்கை.

வெளிநாட்டினர் பெரும்பாலான திரைப்படங்கள் ஒரே இனத்தவரைக் கவராமல் சிறுவர்களுக்கெனத் தனியே திரைப்படங்களையும் பெரியவர்களுக்கெனத் தனியே திரைப்படங்களையும் எடுப்பது சிறந்த முறையே ஆனால் இவற்றால் ஒரு குடும்பமாக வெளிநாட்டினரின் அனைத்துத் திரைப்படங்களினையும் பார்க்க முடியாது. குறிப்பாக ஓரினைச்சேர்க்கைத் திரைப்படங்கள் இந்திய மசாலாக் கலவைத் திரைப்படங்களில் பார்க்க இயலாது அதாவது மசாலாக்கலவைகளான பாடல்கள், அதிரடிக்காட்சிகள் என நிறந்த திரைப்படங்களையே குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள். இதனால் குடும்பத்தினுள் ஏற்படும் பிரிவினைகள் தடுக்கப்படுகின்றன.


இந்தியத் திரைப்படத்துறையில் பல நல்ல திரைப்படங்கள் உளன எடுத்துக்காட்டாக கலைத் திரைப்படங்களான பதேர் பாஞ்சாலி, அபுர் சன்சார், அபரஜிதோ ஆகிய திரைப்படங்கள் சிறப்பானவை மனிதருள் மாற்றத்தினை ஏற்படுத்தும் ஆனால் இன்றைய இந்தியத் திரைப்படங்கள் கலைநயமே இல்லாது மனிதர்களை மிருகமாக மாற்றும் நோக்கில் இந்தியப் பண்பாட்டினைச் சீரழிக்கும் வகையில் மேற்கத்தேயப் பண்பாடுகளினைப் பின்பற்றுகின்ற திரைப்படங்களாக வெளிவருவது மிக வேதனை அழிப்பதாகவுள்ளது வரலாறுகளே இவையாவின் இவற்றைப் பார்த்து அதன்படி வரலாற்றினுள் வாழ நினைப்பவர் பலர். அதனால் சமூகத்தில் ஏற்படும் இழப்பு பாரியது. பல கொலைகாரர்கள் உருவாக்கப்படுகின்றனர். இந்தியத் திரைப்படத்துறையினரும் பணம் புரட்டும் நோக்குடன் இங்கு வருவது மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் ஒரு குத்துப்பாட்டு ஒரு சண்டைக்காட்சி என்ற அரத்த மசாலாவையே அரைப்பதும் மேற்கத்தேயத் திரைப்படங்களினை நகல் எடுப்பதும் எமது பண்பாடுகள் பாரம்பரியங்கள் என்பனவற்றை சீரழிக்கும் நோக்குடனே என்பது பொருந்தும்.

இவைகள் அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே.

சனி, 6 செப்டம்பர், 2008

தினக்கருத்து

சாதி ஒழிப்பின் நன்மைகளும் தீமைகளும்

ஒழிப்பின் நன்மைகள்
இந்தியாவின் பெரும்பாலான பிரச்சனைகள் சாதி அமைப்பினால் ஏற்படுகின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் பெரும்பாலானோர் திராவிடர்களாகவும், தலித்துக்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறானவர்களிற்குப் பெரும்பாலான தொல்லைகள் வந்து போவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஆரியர்கள் தங்கள் இந்து சமயக் கோட்பாட்டினை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை வெளிநாடுவாழ் தமிழர்கள் முதல் பல இந்தியர்கள் வரை சாதி இன்றளவும் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தோ ஈரானியர்கள் மிகவும் சுத்தமாக இருப்பதை விரும்புவர்களாவர். அவர்களுக்கு எப்பொழுதும் தெய்வ நம்பிக்கை உண்டு. தமது தவறுகளை மறைப்பதற்கு தெய்வம் என்ற சாந்தமான கோட்பாடுகளை உருவாக்கி அதனை பிற கல்வியறிவு அற்ற மனிதர்களிடத்தே பரப்பவிட்டு பணம் சம்பாதித்து பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர். பின்னர் தாம் தெய்வம் என்ற பெயரில் பிச்சை எடுத்த மக்களையே பிச்சைக்காரர்கள் என்று கூறி அவ்வினைத்தையே அழிக்கப்பெரிதும் முயல்வர். இதுவே இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களெனக் கருதப்படும் உண்மையான இந்தியர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதும் இலங்கையில் ஆரியர் வம்சாவளியில் வந்த சிங்களவர்களும் , தமிழ் மொழி பேசும் உயர்ந்த சாதியினர் எனத் தம்மை வெளிக்காட்டும் ஆரியத் தமிழ்க் கலப்பினர்களால் உண்மையான கருமை நிறத் தோல் கொண்ட தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும் வரலாறு. இச்சாதிகள் ஒழிப்பினால் பல நன்மைகள்
அனைவருக்கும் சம உரிமைகள் கிட்டும் வாய்ப்பு, பிரச்சனைகள், சண்டைகள் உருவாகாமல் தடுக்கலாம்.

ஒழிப்பின் தீமைகள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமது பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காக்க முயல்வது குறிப்பிடத்தக்கது. அத்தகு பிரிவினரால் சாதி என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வகைக் சாதிக் கடைப்பிடிப்பினால் தமது மொழி, பண்பாடு போன்றனவைகளைப் பாதுகாக்கின்றனர். இது சிறந்த முறையே ஆனாலும் இதனால் காதலர்களைப் பிரிப்பது தமது சாதியினரையே கட்டாயத் திருமணம் செய்து வைப்பது போன்றனவைகள் சற்றுத் தவிர்க்கப்படலாம். சாதி ஒழிப்பினால் மொழி, மதம் , பண்பாடு ஆகியனவைகள் அழிக்கப்படுகின்றது என்பது சற்று கூர்ந்து கவனிக்கத்தக்கது. இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்தே!

தினம் ஒரு பாடல்

கன்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது

மனதைப் பரவசப்படுத்தும் இசை, இதன் காட்சி அமைப்பும் மெட்டு அமைப்பும் மிகச் சிறப்பானது.

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

தினக்கருத்து

தமிழ்த் திரையும் ஆரியர்களின் வேசைத் தனமும்.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் அழகான தோற்றம் கொண்டவர்கள் சிறந்தவர்களாகவும், மற்றவர்கள் அவர்களின் கூட்டுப் போன்ற கதைகளே அதிகம் வருகின்றது மனதிற்கு வேதனை அளிப்பதாக உள்ளது. எடுத்துக்காட்டாக வடிவேல், கவுண்டமணி போன்ற தோற்றம் கொண்டவர்களிற்கு மனதே இல்லை என்றளவிற்கு வெள்ளை நிறத்தோலுடைய இந்தோ - ஜரோப்பிய (ஆரியர்) இவர்களால் ஏற்படுத்தப்பெற்ற இவ்வகை பிரிப்பு கறுமை நிறமாகவும் பார்ப்பதற்கு அழகில் சற்றுக் குறைந்தவர்களாகவும் விளங்கும் உண்மையான தமிழர்கள், நற்குணம் கொண்ட இவர்களை தீயவர்களாகவும் , வில்லன்களாகவும் சித்தரிப்பது தமிழ்த் திரையில் ஆரியர்கள் செய்த மிக மோசச் செயல். தமிழ்த் திரைப்படங்கள் உண்மையான தமிழர்களின் வாழ்வியல் நடைமுறையினை யதார்த்தமான முறையில் சொல்ல வேண்டுமே அல்லாமல் அழகிய காதலர்களின் கதைபோல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை 'சூப்பர்ஸ்டார்' எனச் சொல்வது அவர் சந்திரனில் காலை வைத்தவரென்பதற்காகவா அல்லது உலகத்தினை அவர் கையில் வைத்து ஆளுகின்றார் என்பதற்காகவா. தமிழர்களது சிறந்த பண்பாட்டு விழுமியங்களை சீரழிக்கும் இன்றைய தமிழ்ததிரைப்ப்டங்களினால் அதனை விரும்பிப் பார்க்கும் இளம் சமுதாயம் பைத்தியக்காரர்களாக மாற்றப்படுகின்றார். தமிழ்த் திரைப்படங்களினைப் பார்த்த வெளிநாடுவாழ் ஈழத்துத் தமிழ் இளையோர் தங்களுக்குள் மோதி தமிழர்களது நற்பெயர்களைக் கெடுக்கின்றனர். தமிழ்த் திரைப்படங்களில் பண்டைய தமிழர் வரலாற்று விழுமியங்களைத் தாங்கி வரும் திரைக்கதைகள் வரவேண்டும், இன்றைய யாதார்த்த நிலைகளை தமிழ்த் திரைப்படம் மூலம் உலகினிற்குச் சொல்ல வேண்டும். ஆரிய மயப்படுத்தப்பட்ட பாடல்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டும். வெள்ளை நிறத் தோற்றம் கொண்ட ஆரியர்கள் அல்லாதோர் நடிகர்களாக நடிக்க வேண்டும். இந்தியத் திரைப்படங்களிலிருந்து பிரித்து தமிழர்களுக்கென்று ஒரு தனித் திரைப்பட யுக்தியினைப் பாடல்கள் அற்ற மசாலாக் கலவைகளற்ற (நகைச்சுவை, சண்டைக்காட்சி) ஒரு சிறப்பான திரைப்படத் துறையினை ஆரம்பித்து வைக்க வேண்டும். தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலான கதாநாயகிகள் அழகிய தோற்றம் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் அழகில்லாத கருமை நிறப் பெண்களிற்கு மனதில்லை என்பது போல் இந்த இந்திய- ஜரோப்பியர்களின் வழித்தோன்றல்கள் உருவாக்கியுள்ளது மனதிற்கு மிகவும் வேதனை அளிப்பதாகவுள்ளது.

பதிலளியுங்களேன் !