ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

மூளைக் கிறுக்கல்கள்

அழகென்ன மயிலிறகென்ன காமத்தின் மயக்கம் வரைக்கும் தானேயென்பேன்!
மனதென்ன மொழியழகென்ன வாழ்வின் இறுதி வரைக்கும் தானேயென்பேன்!

விழியென்ன விண்ணோக்கும் பார்வையென்ன அரசகுல மனிதனென்பேன்!
கவியென்ன மெய்ப்பொருள் விளங்கும் ஞானமென்ன அவன் தெய்வமென்பேன்!

வாழ்வென்ன மனதின் மோகமென்ன இறுதி இறப்பென்பேன்!
வாழ்ந்தவன் அவன் வாழ்வு கவியினால் மூழ்கியவன் வாழ்பவன் என்பேன்!


கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !