ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

சனி, 24 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

முதன் முதலாக - எதிரி

இப்பாடல் வரிகளினாலும் அதன் சோகத்திலும் பலமுறை என் மனம் அழுததுண்டு. எனக்குத் துக்கம் ஏற்படும்போதெல்லாம் இப்பாடல்வரிகள் என்னை ஆறுதல் செய்ததுண்டு, ஒருமுறை அல்ல பலமுறை.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கனவுகள்

இஸ்லாமியர் மீதான வெறுப்பு....
நான் இன்று காலை கண்ட கனவானது சற்று வித்தியாசமான கனவாகும். அதாவது எனக்கு முன்னால் ஒரு இஸ்லாமியப் பெண் தலையில் முட்டாக்குப் போட்டுக்கொண்டு வந்திருந்தார். எனக்கருகாமையில் நின்றிருந்த வெள்ளை இனத்தவர் போன்ற ஒருவர் இஸ்லாமியப் பென் வந்தவுடன் உருவந்தமாதிரி ஆகி அவரைத் துரத்த ஆரம்பிக்கின்றார். நானும் திடீரெனப் பயந்துபோனேன். என்னவோ ஏதோ என பயந்து நடுங்கி நான் எழுந்து கனவு கலைந்தது என நினைக்கின்றேன். இக்கனவானது இஸ்லாமியர் மீதான் வெள்ளையினத்தவரின் வெறுப்பினைக் காட்டுவது இங்கு நினைவூட்டியது. நல்ல சமயம் ஒன்று இவ்வாறான அநியாய முறையில் அமெரிக்கர்களாலும், பிர மேற்கத்தேயவர்களாலும் அழிக்கப்படுவது வெட்கக்கேடு. 

தினம் ஒரு பாடல்

ராகுல ராகுல - கஜினி
இப்பாடலின் மெட்டு எம்மைத் துள்ள வைக்கும்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ராத்திரி - அப்பு
இப்பாடல் என்னை பலமுறை வருத்தியதுண்டு, நான் தனிமையில் இந்தியாவில் இருந்த சமயம் இப்பாடலினைக் கேட்டு மனம் வருந்தியதுண்டு.

அனுபவம் புதிது

முதன்முறையாக கணணியில் பதிவிறக்கி விளையாடிய நிகழ்பட ஆட்டம்......
நான் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 20, 2011 மஅன்று மினி நீஞ்சா 'mini ninja' என்ற நிகழ்பட ஆட்டத்தின் சிறு பகுதியினை விளையாடியிருந்தேன், பின்னர் பெரும்பகுதியினை புதன்கிழமை, செப்டம்பர் 21, 2011 அன்று விளையாடியிருந்தேன். நான் இந்நிகழ்பட ஆட்டங்கள்தனை திங்கட்கிழமையிலிருந்து பதிவிறக்கிக் கொண்டேன் என நினைக்கின்றேன், மினி நீஞ்சாவிற்கு முன்னர் டூம் 3 யினை பதிவிறக்கினேன் ஆனல் அதனை விளையாட ஆயத்தமானபோது உள்ளே செல்ல முடியவில்லை. மினி நீஞ்சா தாந் உருப்படியாக இருந்தது எனது மாக்கில். ஏற்கனவே மினி நீஞ்சாதனை நான் 'Demo' வில் விளையாடினேன். நான் இவ்வாறு ஏற்கனவே ஆடிய நிகழ்பட ஆட்டம் கணணியில் முதன்முறையாக ஆடியது புதிய உற்சாகத்தினைக் கொடுத்தது. இவ்வாட்டத்தினால் ஏற்பட்ட அனுபவம் என் வாழ்நாளில் ஏற்பட்ட புதிய அனுபவம் ஆகும்.

புதன், 21 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

லில்லி மலருக்கு - உலகம் சுற்றும் வாலிபன்

இப்பாடல் என்றும் மறக்க முடியாத கேட்டால் நினைவுகளினை நெஞ்சினிற்குள் அளிக்கும் பாடல்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

தேன் - நான் அவன் இல்லை
இப்பாடல் மிகவும் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டுள்ளது, இதனைக் கேட்கும்பொழுது நகைச்சுவை உணர்வும் ஏற்படுகின்றது.

கேள்விப்பட்ட செய்திகள்

பாப்பா ஜயரினைப் பிடித்த கிறீஸ் மனிதர்கள்.....
இன்று இப்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் எனது தாயார், அம்மம்மாவிடம் பாப்பா ஜயரினைப் பற்றி ஊரில் நடந்த கதையினை எழுதிக்கொண்டிருந்தார். நானும் ஆவலுடன் கேட்ட போதுதான் தெரிந்தது என்ன நடந்தது என்று. பாப்பா ஜயர் என்ற ஜயர் கெருடாவிலிலிருந்து கல்லுவம் என்ற இடத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளை அம்மணமாக கறுத்த உருவம் அவர் பக்கம் வந்த போது, அவர் கிட்டச் சென்று பார்த்திருக்கின்றார். அவர் அவ்வுருவத்திந் கிட்டே சென்று பார்த்தபோது அது கிறீஸ் மனிதர் எனத் தெரிந்துகொண்டார், அவர்கள் அவரை மறித்து கழுத்தைப் பிடித்தும் தலை முடிதனைப் பிடித்தும் சித்திரவதை செய்து பின்னர் அவருக்குப் பொம்பிளைப் பிள்ளை இருக்கின்றதோ எனக் கேட்டனர் என அம்மா கூறினார், மேலும் பாப்பா ஜயர் பயத்தில் ஓம் என்று பொய் சொன்ன காரணத்தினால் தப்பித்துக்கொண்டார் என்பதுவும் பின்னர் கெருடாவில் பகுதிக்குச் சென்று கிறீஸ் மனிதர்கள் பற்றிச் சொன்னார் என்பதனை அம்மா சொன்னார். மேலும் அம்மா தெரிவிக்கையில் கிறீஸ் மனிதர்கள் தமிழ் இராணுவக் குழுவினரே என்பதனையும் தெரிவித்தார். முந்தி வெள்ளை வான் இப்பொழுது கிறீஸ் மனிதன் என தமிழீழப் பிரதேச மக்கள் இவ்வாறு பல பேப்புண்டைகளால் சீரழிக்கப்படுவது வேடிக்கை.

பதிலளியுங்களேன் !