திங்கள், 22 டிசம்பர், 2008

கனவுகள்

நடனமாடும் பெண்கள்...........

நான் ஒரு வீட்டின் கூரையினால் சென்று பார்த்த பொழுது அங்கு உள்ளே தமிழ்ப் பெண்கள் இருப்பதனை அவதானித்தேன். பின்னர் அங்கு சென்று பல பொருட்களை எடுத்தேன் பின்னர் ஒரு கறுப்பின இளைஞனிடம் வினவினேன் இங்கு தமிழ்ப் பெண்கள் மற்றும் பிற இளைஞர்கள் என்ன செய்கின்றனர் என்று அவர் கூறினார் இங்கு அவர்கள் தங்குகின்றவர்கள் என்று. மேலும் நான் அக்கூரையின் வழியே நடந்து செல்ல நடன வகுப்புக்கள் நடைபெறும் சத்தம் கேட்கின்றன. ஆனாலும் கூரையில் உச்சியில் இருந்து செல்லப் பயந்து பின்னே வருகின்றேன். இதன்பின்னர் ஒரு மடம் போல் ஓலைக் கூரையினால் வேயப்பட்ட குடிசைப் பகுதிக்குச் சென்று தங்குகின்றேன். அங்கு தங்குவது மிகவும் விருப்பமாக எனக்குப் பட்டது.

வியாழன், 4 டிசம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

வெள்ளைக்காரியினைக் காதலித்த கனேடியத் தமிழ் இளைஞர்..........

உணவகம் ஒன்றில் தமிழர் துப்பரவு செய்யும் பணியில் ஈடிபட்டிருந்தார் அவர் இரசிய நாட்டினைச் சேர்ந்த வெள்ளைக்காரி  ஒருவருடன் சேர்ந்துதான் வேலை செய்வது வழக்கம். ஒரு சமயம் அவர் அப்பெண் தன்னிடம் தாராளமாகப் பழகுவதைப் பார்த்துப் பின் தன்னைக் காதல் செய்வதாக எண்ணி அவளைக் கட்டியணைத்திருக்கின்றார். கோபம் கொண்ட அவள் அவரைத் தள்ளிவிட்டு காவல்துறை அதிகாரிகளை அழைக்க எத்தனிப்பதாகக் கூறினார். பின்னர் இவ்வாறு நட்பைக் காதலாகத் தவறாக எண்ண வேண்டாம் எனவும் கூறினார். இச்செய்தியினை குலோபல் வூட் நண்பரான குபேந்திரன் எனக்குக் கூறினார்.

புதன், 3 டிசம்பர், 2008

அனுபவம் புதிது

குருவி ஒன்று என் கையில் இறந்தது.........



நான் குலோபல் வூட் கஸ்டம் தொழிற்சாலையில் நேற்று வேலைக்குச் சென்றதும் ஒரு குருவி அத்தொழிற்சாலையின் உள்ளே பறக்கத் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த அங்கு வழமையாக என்னுடன் இரவு நேரங்களில் வேலை செய்து பின் காலையில் வேலை செய்யத் தொடங்கிய இளைஞன் பயந்தான். யூத மதத் தந்தை மற்றும் இஸ்லாமியத் தாயினால் உருவான பத்தொன்பது வயது இளைஞனான அவன் எனது சூப்பர்வைசர் ஆன முகமதுவிடம் சென்று சொன்னான் குருவி ஒன்று அங்கு உள்ளது என. அக்குருவியினைக் கையினால் நெரித்தும் உணவினை வாயினுள் ஓட்டியும் முகமது தீத்தினார். சிறிது வேளையின் பின்னர் கரப்பான் பூச்சியினைக் கொல்வதற்காக வைத்திருந்த மருந்தின் அருகில் அது சென்றதாகக் கூறினான். அவன் சென்ற சிறிது நேரத்தில் பின்னர் குருவியினைப் பார்க்க நான் சென்றேன். குருவி துடித்தது, பின் என் கையில் இறந்தது. என் கையில் வந்து இறப்பதற்கு அக்குருவி என்ன பாவம் செய்ததோ ஒருவேளை என் கை பட்டதனால் அக்குருவி இறந்ததோ. இது என் வாழ் நாளில் ஏற்பட்ட புதிய அனுபவம்.

ஞாயிறு, 30 நவம்பர், 2008

அனுபவம் புதிது

கணவனை விடுத்து தர்சனுடன் ஓடிய கனேடியத் தமிழ்ப் பெண்.........................

நான் Smurfit - Image pac நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த வேளை அங்கு ஒவ்வொரு Line ற்கும் ஒரு Leader இருப்பார் அவ்வாறு இருந்த தர்சனுடன் இலங்கையில் இருந்து அண்மையில் வந்த பெண்மணி தன் கணவனை விடுத்து ஓடினார் இவை எனது வாழ்க்கையில் உண்மையில் முதன்முறையில் ஏற்பட்ட அனுபவம். ஏனெனில் இவ்வாறு தமிழ்ப் பெண்கள் கணவனை விடுத்து வேறொருவருடன் ஓடிய செய்திகள் திரைப்படங்களில் பார்த்ததுண்டு ஆனால் நேரடியாகக் காணவில்லை ஆகையால் இச்சம்பவம் எனது வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய அனுபவம் என நான் நினைக்கின்றேன்.

சனி, 29 நவம்பர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பாலியல் திரைப்படத்தில் நடிக்கவிருந்த தமிழீழத்தினைச் சேர்ந்த பெண்..................................

என்னுடைய குலோபல் வூட் நண்பர் கூறினார் "சுவிட்சர்லாந்தில் தமிழீழத்தினை அதாவது இலங்கையினைச் சேர்ந்த இளம் தமிழ்ப்பெண் ஒருவர் இணையத்தளம் மூலம் ஒரு வயது போன வெள்ளை இனத்தவருடன் அன்றாடம் உரையாடியுள்ளார் என்று. அது மட்டுமல்லாமல் அவ்வெள்ளையன் பெண்களை வைத்துப் பாலியற் திரைப்படங்கள் எடுப்பவன் என்றும் தமிழ்ப்பெண் இணையம் மூலம் அவனைப் பற்றித் தெரிந்துகொண்டு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார் என்றும் எனது நண்பர் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது அப்பெண்ணின் வீட்டார் எவ்வளவு தேடியும் அவளைக் காணவில்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் முறையிடவே அவர்கள் அவள் உபயோகம் செய்த கணணியில் அவர் Chat பண்ணியதை வைத்து எங்கு சென்றிருக்க முடியும் என்று யூகித்து அவ்வெள்ளைக்கார வயோதிபனிடமிருந்து அவளை அழைத்து வந்தனர். பின்னர் அவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுப்பப்பட்டு கல்வி கற்றார் என்பது அனைத்தும் எனது Global Wood Custom நிறுவன நண்பரால் சொல்லக் கேள்விப்பட்ட செய்திகளே! உண்மையா என்பது எனக்குத் தெரியாது.

செவ்வாய், 25 நவம்பர், 2008

அனுபவம் புதிது

யேசுநாதர் காப்பாற்றிய தகவல்..........
இன்று அதிகாலை நான் வேலைத்தளத்திலிருந்து பேருந்தில் செப்பர்ட் அவெனியூவால் (Sheppard Avenue) வரும் வேளை பேருந்தில் இருந்த கறுப்பின இளைஞன் ஒருவன் என்னிடம் வந்து கை காட்டி தான் நான்கு வருடங்களுக்கு முன்னரோ பின்ச் (Finch) மற்றும் நெல்சன் (Neilson)சாலையோரத்தில் சுடப்பட்டதாகவும் யேசு நாதர் தன்னைக் காப்பாற்றியதாகவும் கூறிச் சென்றார்.

தினம் ஒரு பாடல்

கட்டிக்கொள்ளவா - வாழ்க்கை

கவர்ச்சிகரமான உல்லாசப் பாடல்.

சனி, 22 நவம்பர், 2008

தினக்கருத்து

தமிழ்த் திரைப்படத்துறையும் தமிழ் இதழ்களும்..........

இன்று தமிழ் இதழ்களில் வரும் செய்திகளானது வெறுமனே செய்திகள் அன்று தமிழர்களது வரலாற்று விழுமியங்களையும் அவர்கள் பழக்க வழக்கங்கள் எனப்பல உண்மைகளினனயும் உள்ளடக்கியதாக வருகின்றது. இவ்வாறு தமிழ் மொழிப் பற்றாளர்களினால் வெளிவரும் இவ்விதழ்களினால் தமிழ் மொழி வளர்க்கப்படுகின்றது, பண்பாடுகள் பேணப்படுகின்றன. இத்தகு இதழ்களின் மூலம் வருங்கால சந்ததியினர் தமது மூதாதையர் எவ்வாறான வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டிருந்தனர் என்பதனை அறிய இயலும். தமிழ்த் திரைத்துறையினரால் தமிழர்களின் வரலாறுகள் பதியப்படும்போது அதாவது பண்டைக்காலத்தமிழகத்தில் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டவாறு திரையில் வரலாறுகள் எழுதப்படும்பொழுது தமிழ் இதழ்களிலிருந்தும் வரலாறுகள் பெறப்படும். எனவே இதழ்கள் நாளைய வரலாற்றுத் திரைப்படங்களிற்கு ஒரு சாட்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினைப் படிப்பது என்பது தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையினை விளங்கிக்கொள்ள முடியுமான ஒரு சிறந்த முயற்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினை நடாத்துபவர்கள் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிக்காக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கல்ல. இன்றைய இதழ்கள் பல மேற்கத்தேய மோகங்களினை கொண்டு உருவாகுவது பண்பாட்டுச் சீரழிப்பிற்கு இட்டுச் செல்கின்றது குறிப்பிடத்தக்கது. எனவே உலகின் பல பாகங்களிலும் இயங்கும் தமிழ் இதழ்கள் அனனத்தும் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவவ எனது தனிப்பட்டக்கருத்தே!.

தினம் ஒரு பாடல்


கடவுள் பாதி மிருகம் பாதி - ஆளவந்தான்

இப்பாடல் வரிகளால் தினம் புத்துயிர் பெறலாம் சோம்பேறிகள் கூட.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

தினம் ஒரு பாடல்



ஆலப்போல் - எஜமான்

இப்பாடலைக் கேட்கும்பொழுது வரும் மெட்டானது காற்றில் இருந்து வரும் சத்தம்போலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிலளியுங்களேன் !