செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கேள்விப்பட்ட செய்திகள்

பாப்பா ஜயரினைப் பிடித்த கிறீஸ் மனிதர்கள்.....
இன்று இப்பொழுது இதனை எழுதும் சற்று முன்னர் எனது தாயார், அம்மம்மாவிடம் பாப்பா ஜயரினைப் பற்றி ஊரில் நடந்த கதையினை எழுதிக்கொண்டிருந்தார். நானும் ஆவலுடன் கேட்ட போதுதான் தெரிந்தது என்ன நடந்தது என்று. பாப்பா ஜயர் என்ற ஜயர் கெருடாவிலிலிருந்து கல்லுவம் என்ற இடத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளை அம்மணமாக கறுத்த உருவம் அவர் பக்கம் வந்த போது, அவர் கிட்டச் சென்று பார்த்திருக்கின்றார். அவர் அவ்வுருவத்திந் கிட்டே சென்று பார்த்தபோது அது கிறீஸ் மனிதர் எனத் தெரிந்துகொண்டார், அவர்கள் அவரை மறித்து கழுத்தைப் பிடித்தும் தலை முடிதனைப் பிடித்தும் சித்திரவதை செய்து பின்னர் அவருக்குப் பொம்பிளைப் பிள்ளை இருக்கின்றதோ எனக் கேட்டனர் என அம்மா கூறினார், மேலும் பாப்பா ஜயர் பயத்தில் ஓம் என்று பொய் சொன்ன காரணத்தினால் தப்பித்துக்கொண்டார் என்பதுவும் பின்னர் கெருடாவில் பகுதிக்குச் சென்று கிறீஸ் மனிதர்கள் பற்றிச் சொன்னார் என்பதனை அம்மா சொன்னார். மேலும் அம்மா தெரிவிக்கையில் கிறீஸ் மனிதர்கள் தமிழ் இராணுவக் குழுவினரே என்பதனையும் தெரிவித்தார். முந்தி வெள்ளை வான் இப்பொழுது கிறீஸ் மனிதன் என தமிழீழப் பிரதேச மக்கள் இவ்வாறு பல பேப்புண்டைகளால் சீரழிக்கப்படுவது வேடிக்கை.

திங்கள், 19 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

மாயா மாயா - பாபா
தத்துவமான நல்ல பாடல்.

கனவுகள்

பள்ளியின் ஞாபகம்.....
நான் இன்று கண்ட கனவு எனது பள்ளி நாட்களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களினை மையமாக வைத்து வந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. நான் ஒரு பள்ளிக்குப் படிக்கப் போறன் அங்கு ஆசிரியர்கள் நான் பிரதம மந்திரியைப் பற்றி ஏதோ கதைத்ததனைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள், என்னுடன் வந்த சக மாணவர்கள் எதையோ எடுக்கப்போக நானோ தனியே நின்று பின் வகுப்புக்குழ்ல் சென்றேன். உள்ளே அமாண்டா விஞ்ஞானப் பாடத்தினை எடுத்துக்கொண்டிருந்தா, எனக்கு அருகாமையில் இலங்கையைச் சேர்ந்த தலை முடி நரைத்த நபரும் அமர்ந்திருந்தார். இவ்வாறு கனவு வந்து போனது, பள்ளி ஒரு கொட்டிலில் அமைந்திருந்ததைப் போன்ற தோற்றத்தினைக் கொண்டிருந்தது. இக்கனவினை நான் ஏன் கண்டேன் என்பது எனக்குத் தெரியவில்லை ஆனாலும் இக்கனவினில் இருந்து விழித்துக் கொண்டதும் எந் மனம் சற்றுப் பயத்தில் ஆழ்ந்தது. 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

போகப் போக - பட்டியல்
இப்பாடலில் ஒரு குதூகலம், ஒரு மகிழ்ச்சி பிறக்கின்றது.

சனி, 17 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

ஏனோ - கிழக்குக் கடற்கரைச் சாலை
இப்பாடலின் அமைப்பானதும் அதன் மெல்லிசையும் என் மனதினை பல சோகங்கள் தனை உருவாக்கியது.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தினம் ஒரு பாடல்

நீ காற்று - நிலாவே வா
இப்பாடலினை எப்பொழுது கேட்டாலும் என் மனதிற்குள் புத்துணர்ச்சி பிறக்கும்.

வியாழன், 15 செப்டம்பர், 2011

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கேள்விப்பட்ட செய்திகள்


வேலுப்பிள்ளை அண்ணையின் மரணம்..
அம்மம்மாவின் கடையினை நடத்தியவரும் எனக்கு சிறுவயதிலே பார்த்த முகமுமான வேலுப்பிள்ளை அண்ணை இறந்த செய்தியினை அம்மம்மா கூறக் கேட்டதும் மனதிற்குச் சற்று வருத்தமாக இருந்தது. அவர் எனக்குப் பலமுறை தொலைபேசியில் இங்கு கனடாவிற்கு எடுத்து என்னுடன் உரையாடினார் என்பது இங்கு சொல்லத்தகும். நானும் எவ்வாறு அவர் மரணமெய்தினார் என்பதனை அறிந்த போது மிகவும் வேதனைக்குரிய ஒரு வடுவாக எனக்கு ஏற்பட்டது உண்மைச்செய்தியினை அம்மம்மா வாயின்மூலமாகக் கேட்டபின்பு. அம்மம்மா கூறினார் வன்னியில் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற சமயம் அதாவது ஈழத்தின் இறுதிப்போரும் தமிழின அழிப்பின் உச்சகட்ட நிலையுமான போரின் போது சிங்கள இன வெறி இராணுவத்தினரால் வேலுப்பிள்ளை அண்ணையும் அவரின் மகனும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு வேலுப்பிள்ளை அண்ணை படுகொலை செய்யப்பட்டதனைப் பார்த்ததாகச் சொல்லும் அம்மம்மா அதனைப்பார்த்த அவர் மனைவி பைத்தியம் போன்று ஆனார் என்பதனையும் தெரிவித்தது இங்கு படு வேதனை கொடுக்கும் செயலாக உள்ளது. அவர்தம் இன்னொரு பிள்ளையுடன் இருப்பதாக அம்மம்மா வேதனியுடன் தெரிவித்தார். 

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

கேள்விப்பட்ட செய்திகள்



இன்றைய ஈழத்தில் விபச்சாரம்…….

ஈழத்தில் இறுதிப் போர் முடிவடைந்த இக்காலகட்டத்தில் தமிழ்ப் பெண்கள் பலவந்தமாகவும்,  சில பெண்கள் தாமாகவே போயும் இலங்கை இரானுவத்தினருடன் விபச்சாரம் நடத்துவதாக டிலக்ஸன் என்பவர் எனக்குத் தெரிவித்தார். இவர் அண்மையில் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்தவரென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அவர் உண்மையைச் சொன்னாரா அல்லது  பொய்யினை உரைத்தாரா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவரிடம் நான் மென்மேலும் துருவி விசாரித்த பொழுது கூறினார் "நாங்கள் ஒருக்கா சிநேகிதங்கள் எல்லாம் சேர்ந்து போகும்போது ஒரு தமிழ்ப்பொம்பிளையோடு வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அவா பக்கத்திலிருந்த துணை இராணுவக் குழுவினருக்குச் சென்று காட்டிக்கொடுத்து எங்களுக்கு அடி விழுந்தது" என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தார். தலைவர் ஆண்ட காலத்தில் இவ்வாறு விபச்சாரம் நடக்கவில்லை இப்பொழுது இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் தமிழீழம் வந்தபின்னரே இவ்வாறு தமிழ்ப்பெண்களின் வாழ்க்கை சீரழக்கப்படுகின்றது என்று. அவர் கூறிய விடயங்களை வைத்து  ஆராய்ந்துபார்த்தால் தமிழீழ வரலாற்றில் கலங்கம் விளைவிக்கம் பொருட்டோடு இவ்வாறு சில பெண்களின் நடத்தைகள் உள்ளது என்பது இங்கு அறியலாம், ஆனாலும் எது உண்மை என தெரிந்துகொண்டபின்னர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

திங்கள், 5 செப்டம்பர், 2011

தினக்கருத்து


கனடாவில் சம்பளம் குறைய வாங்கும் ஆசிரியர்கள்……
நான் கால்கில் படித்த சமயம் டிஸைன் யூவர் பியூச்சர் என்ற வகுப்பினை எடுத்திருந்தேன். அவ்வகுப்பில் எமது வருங்காலத்தில் எவ்வகை தொழிலை நாம் புரிவோம் என்பதனை தெரிந்து கொண்டேன், நானும் வரலாற்று ஆசிரியராக வரவிரும்பி அதற்காக ஒரு நேர்காணலை நடத்தவும் தயாரானேன். நான் நேர்காணலை நடத்திய ஆசிரியர் ரெனீ சேவியர் (இலங்கையர் என நினைக்கின்றேன்) ஆவார். அவரிடம் எவ்வாறு உங்கள் தொழில் போகின்றது என்ன சம்பளம் எனக் கேட்டபோது சம்பளம் குறையக் கிடைக்கின்றது சாதாரணமாக மேல்நிலைப்பள்ளிகளில் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும் ஆனால் இப்பொழுது நான் கல்வி கற்பிக்கும் முதியோர் கல்வி நிலையத்தில் சம்பளம் கொஞ்சமாகவே கிடைக்கின்றது எனத் தெரிவித்தார். நான் பின்னர் இதனை எனது வகுப்பினில் தெரிவித்தேன். அவ்வகுப்பினை நடத்திய ஆசிரியர்தான் ஆங்கில வகுப்புக்களினை தலைமை தாங்கும் ஆசிரியர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தகும் அவர் பெயர் மாரீகன் மோலனார் (டச்சுக்காரர்). நான் பன்னிரண்டாம் ஆண்டு பல்கலைக்கழக வகுப்பினை ரீதா பியாஸா என்னும் (இத்தாலிய நாட்டுக்காரர்) இட்ம் கற்றேன். அவரிடம் நான் கேட்டேன் "Rita how much money you are making, per an hour ?" அதற்கு அவர் சொன்னார் தான் முன்பெல்லாம் நிறைய எடுத்தனான் இப்பொழுது குறைவாகத் தான் சம்பளம் கிடைக்கின்றது என்று. இவர் சொன்னது மிகவும் வேதனைப்பட்டேன் நான் இவ்வாறு கல்வி கற்றவர்கள் ஏமாற்றப்படுவது கனேடிய அரசாங்கமோ அதன் சட்ட திட்டமோ எங்கோ பிழை செய்கின்றது என்பது மட்டும் புலப்படுகின்றது. இத்தகைய காரணங்கள் ஒரு வேளை வெள்ளை இனக் கனேடியர்கள் சம்பளத்தைக் கூட எடுத்துக்கொண்டு பிற இனங்களிற்கு குறைத்துச் சம்பளம் கொடுப்பதநை மென்மேலும் விளக்குகின்றது. கல்வி கற்றவர்களிடையே இனத்துவேசம் இவ்வளவு அதிகமாக இருக்குது என்றால் கனடா எவ்வளவு வெள்ளைக் கக்கூஸினால் மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது வெட்டவெளிச்சமான உண்மை.

பதிலளியுங்களேன் !