செவ்வாய், 25 நவம்பர், 2008

அனுபவம் புதிது

யேசுநாதர் காப்பாற்றிய தகவல்..........
இன்று அதிகாலை நான் வேலைத்தளத்திலிருந்து பேருந்தில் செப்பர்ட் அவெனியூவால் (Sheppard Avenue) வரும் வேளை பேருந்தில் இருந்த கறுப்பின இளைஞன் ஒருவன் என்னிடம் வந்து கை காட்டி தான் நான்கு வருடங்களுக்கு முன்னரோ பின்ச் (Finch) மற்றும் நெல்சன் (Neilson)சாலையோரத்தில் சுடப்பட்டதாகவும் யேசு நாதர் தன்னைக் காப்பாற்றியதாகவும் கூறிச் சென்றார்.

தினம் ஒரு பாடல்

கட்டிக்கொள்ளவா - வாழ்க்கை

கவர்ச்சிகரமான உல்லாசப் பாடல்.

சனி, 22 நவம்பர், 2008

தினக்கருத்து

தமிழ்த் திரைப்படத்துறையும் தமிழ் இதழ்களும்..........

இன்று தமிழ் இதழ்களில் வரும் செய்திகளானது வெறுமனே செய்திகள் அன்று தமிழர்களது வரலாற்று விழுமியங்களையும் அவர்கள் பழக்க வழக்கங்கள் எனப்பல உண்மைகளினனயும் உள்ளடக்கியதாக வருகின்றது. இவ்வாறு தமிழ் மொழிப் பற்றாளர்களினால் வெளிவரும் இவ்விதழ்களினால் தமிழ் மொழி வளர்க்கப்படுகின்றது, பண்பாடுகள் பேணப்படுகின்றன. இத்தகு இதழ்களின் மூலம் வருங்கால சந்ததியினர் தமது மூதாதையர் எவ்வாறான வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டிருந்தனர் என்பதனை அறிய இயலும். தமிழ்த் திரைத்துறையினரால் தமிழர்களின் வரலாறுகள் பதியப்படும்போது அதாவது பண்டைக்காலத்தமிழகத்தில் கல்வெட்டுக்கள் எழுதப்பட்டவாறு திரையில் வரலாறுகள் எழுதப்படும்பொழுது தமிழ் இதழ்களிலிருந்தும் வரலாறுகள் பெறப்படும். எனவே இதழ்கள் நாளைய வரலாற்றுத் திரைப்படங்களிற்கு ஒரு சாட்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினைப் படிப்பது என்பது தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையினை விளங்கிக்கொள்ள முடியுமான ஒரு சிறந்த முயற்சி. எனவே இன்றைய தமிழ் இதழ்களினை நடாத்துபவர்கள் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிக்காக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கல்ல. இன்றைய இதழ்கள் பல மேற்கத்தேய மோகங்களினை கொண்டு உருவாகுவது பண்பாட்டுச் சீரழிப்பிற்கு இட்டுச் செல்கின்றது குறிப்பிடத்தக்கது. எனவே உலகின் பல பாகங்களிலும் இயங்கும் தமிழ் இதழ்கள் அனனத்தும் தமிழர்களது பண்பாடுகளினைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவவ எனது தனிப்பட்டக்கருத்தே!.

தினம் ஒரு பாடல்


கடவுள் பாதி மிருகம் பாதி - ஆளவந்தான்

இப்பாடல் வரிகளால் தினம் புத்துயிர் பெறலாம் சோம்பேறிகள் கூட.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

தினம் ஒரு பாடல்



ஆலப்போல் - எஜமான்

இப்பாடலைக் கேட்கும்பொழுது வரும் மெட்டானது காற்றில் இருந்து வரும் சத்தம்போலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 15 நவம்பர், 2008

தினக்கருத்து

காமத்தில் மூழ்கியவர் பிறர் அழகை நோக்குவர்...........

என்னுடன் குலோபன் வூட் கஸ்டம் (Global Wood Custom) நிறுவனத்தில் பணிபுரிவர்களில் பத்தொன்பது வயதுமிக்க ஒருவன் வேலி செய்கின்றான். அவனது தாயார் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்தவர் என்பதும் தந்தையார் யூதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் ஏழு குழந்தைகள் தனது பெற்றோருக்கு என்பதும் அவர் வாயினால் நான் சொல்லக்கேட்டதாகும். மேலும் காமமா காதலா சிறந்தது என்றொரு வாதத்தினை அவருடன் உரையாடினேன் அவர் கூறினார் மக்கள் அழகுள்ளவராக இருப்பதே நன்று என்று நான் கூறினேன் காமத்தில் மூழ்கியவர்கள் தான் பிறர் உடலழகினையும் அகத்தின் அழகினையும் பார்ப்பர் என்று. அதற்கு அவர் தனது கருத்தான காமமும் காதலும் ஒன்று என்பதனை நிரூபிக்க முற்பட்டார் அவ்வேளை நான் கூறினேன் ''உமது தாய் சிறிதளவு உடற்பருமனாக இருந்தால் நீர் உமது தாயின் மீது வெறுப்புச் செலுத்தப்போகின்றீரா'' அவர் மேலும் தெரிவித்தார் தாயிடம் செலுத்துவது அன்பு என்றும், காதலும் காமமும் ஒன்று எனவும் தெரிவிக்க முற்பட்டார். அவரிடம் கேட்டேன் ''நீர் ஒரு மருத்துவரானால் நோயாளிகளிடம் அழகைப்பார்த்தா அல்லது அவர்களது நிறத்தைப் பார்த்தா மருந்து கொடுப்பீர் அல்லது அவர்களைப் பரிசோதிப்பீர் ?'' , அதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை. பின்னர் தமிழ் நண்பரின் சீருந்தில் பயணம் செய்த வேளை அவரிடம் கேட்டேன் ''உமக்கு ஒரு காதலி இருக்கின்றார் என்று வைப்போம் அவர் விபத்தில் சிக்கி அவர் முகம் கோணலாகினால் அவரது முகத்தின் அழகினை வைத்து வெறுப்பீரா இல்லை அன்பு செலுத்திக் காதல் செய்வீரா! '' , அவரிடம் இருந்து எந்தவொரு பதிலையும் நான் கேட்கவில்லை. இதனால் எனது தனிப்பட்டக்கருத்து என்னவென்றால் காமத்தில் மூழ்கியவரே பிறரிடத்தில் அழகை நோக்குவர். அழகை நோக்காமல் பிறர் மனத்தின் அழகினை நோக்குபவரே சிறந்த மனிதர். இவை அனைத்தும் எனது தனிப்பட்டக்கருத்துக்களே .

சனி, 25 அக்டோபர், 2008

கேள்விப்பட்ட செய்திகள்

மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடும் தமிழீழத்தினைச் சேர்ந்த கனேடியத் தமிழ்ப் பெண்கள்.................

என்னுடன் குலோபல் வூட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தமிழ் நண்பர் கூறினார் தான் ஒரு திருமண நிகழ்விற்குச் சென்றதாகவும் செல்லும்பொழுது அங்கே இளவயதுத் தமிழ்ப்பெண்களும் ஆண்களும் மதுபானம் அருந்திவிட்டு ஆட்டம் போடுகின்றனர் என்று. இது அவர் வாயால் சொன்னக்கேட்ட செய்தியே தவிர எனது கண்களால் நான் பார்க்கவில்லை.

தினம் ஒரு பாடல்



கனவெல்லாம் - கிரீடம்

இப்பாடலின் மூலம் எனக்குக் கிடைக்க முடியாத தந்தையினை நினைந்து வருந்துகின்றேன்.

தினக்கருத்து

வடிவேல் உண்மையில் பரிசுத்தமானவரே.........

தமிழ்த் திரையுலகம் நகைச்சுவை நடிகர்களாக குள்ளமான தோற்றம் கொண்டவர், கருமை நிறம் கொண்ட மெல்லிய உடலைக் கொண்டவர்கள் போன்றவர்களைத் தேர்ந்தெடுப்பதென்பது வேடிக்கையிலும் வேடிக்கை இந்தோ ஜரோப்பியர்களான ஆரியர்கள் அதாவது ஜயர் முதல் வடக்கு இந்தியர்கள் அனைவரும் அழகிற்கும் காமத்திற்கும் மயங்கியவர்கள். இவ்வாறான மனிதர்களால் கருமை நிறம் கொண்டவர்களாகவும் அழகில் சற்று ஆரியர்களில் குறைந்தவர்களாகத் திகழும் திராவிடர்கள் பல ஆண்டுகாலமாக கோவில் என்ற பெயரிலும் இறைவன் என்ற மூட நம்பிக்கையினாலும் அடிமைப் படுத்தப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பாதிப்புக்கள் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களிலும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. தலித்தின மக்கள் பலர் ஆரியர் கலப்பினால் உருவானவர்களால் கொலை செய்யப்படுவது சாதிக் கட்டமைப்பினால் அவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது போன்றவை ஆரியர்கள் பூச்சுத்தும் வேலையில் இன்னுமொரு வடிவமே! அவ்வகையில் கருமை நிறம் கொண்ட மெல்லிய தோற்றம் கொண்ட வடிவேல் கமல்ஹாசன் போன்ற ஆரிய நடிகரைக்காட்டிலும் குணத்தில் சிறந்தவரே பண்பில் உயர்ந்தவரே ஏனெனில் கமல் போன்ற நடிகர்கள் திரைப்படங்களில் நல்ல கருத்தைக் கூறிவிட்டுத் தனது வாழ்க்கையில் பல பெண்களை மணம் செய்து பலானக் காட்சிகளினைத் தமிழ்த் திரைப்படங்களிற்குள் உட்புகுத்தி ஆரியப் பண்பாடுகளான ஓக்கும் பண்பாடுகளைத் தமிழர் பண்பாடென உலகிற்கு எடுத்துரைக்க முனைவது வேடிக்கையிலும் வேடிக்கை. இவ்வாறானவர்களினால் தமிழர் என்ற உணர்வே அற்று ஆரியரின் வேசைத் தனமே எங்களுக்கும் புகுவது அதாவது புகுத்த நினைப்பது படு முட்டாள்தனம். கமல் ஹாசன் போன்ற ஆரியர்களின் அழகிய பெண்கள் தம் அழகால் திராவிடர்களது பண்பாட்டிற்கு அல்வா கொடுத்துப் பின் தமிழ் இனத்தையே அழிக்க நினைப்பது குறிப்பாக இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினைப் போன்று படு புத்திசாலித்தனமாக ஆரியர்களின் வேசைத்தனம் தமிழ்த் திரைப்படங்கள் வாயிலாகவும் தொடர்வது வேடிக்கையிலும் வேடிக்கை. ஆரியர்களின் வேசைத்தனம் மிகுந்த குணங்கள் கொண்ட கமல்ஹாசன் போன்ற நடிகர்களைக் காட்டிலும் வடிவேல் போன்ற நடிகர்கள் பண்பில் சிறந்தவரே! இவை அனைத்தும் எனது தனிப்பட்டக் கருத்தே!

வியாழன், 16 அக்டோபர், 2008

கனவுகள்

உடைந்த கட்டடங்களும் இறைப் படங்களுடன் கூடிய அலுவலகமும்........

என்னுடன் குலோபல் வூட் தொழிற்சாலையில் வேலை செய்பவரின் வீட்டிற்குச் சென்றேன் மிக எளிமையான விடுதியில் அவர் தங்கியிருக்கின்றார் அவர் மனைவியும் என்னை அன்போடு உபசரிக்கின்றார். பின்னர் அவர் வீட்டிற்கு அருகாமையிலேயே புத்தகங்களை ஆராய்ச்சி செய்யும் தமிழர் ஒருவர் இருந்துவந்தார். அவரை நான் உள்ளே சென்று சந்திக்கும் சமயம் அவரிடமிருந்து சிலவற்றை காண்பித்ததாக ஞாபகம் அவர் அலவலகம் முழுவதும் இறைவனின் படங்கள் முழுவதும் நிரம்பியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

பதிலளியுங்களேன் !