புதன், 29 செப்டம்பர், 2010

தினக்கருத்து

எனது பூர்வீகம் இரசிகர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்……

எனது blogger இணையத்தினை இவ்வளவு காலமும் இரசித்த பயணர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் ஓர் அறிவித்தல். இதுவரை காலமும் நான் தமிழிலேயே எழுதிவந்த 'எனது பூர்வீகம்' ஆங்கிலம் தெரிந்த அன்பர்களுக்காகவும் தமிழில் எவ்வாறு எழுதப்பட்டதுபோன்ற நடையில் எழுத முயல்கின்றேன். இதனால் பயனடையப்போவது நான் மட்டுமல்ல உலக அரங்கிலும் தமிழ் மொழியின் சிறப்பினை உயர்த்த இது ஒரு நுணுக்கமான வழி என நான் கருதுகின்றேன். ஆங்கிலம் உலகில் இன்று ஒரு இன்றியமையாத மொழி ஆகையினால் அம்மொழியின் மூலம் உலக மக்கள் அனைவரினையும் எனது பூர்வீகத்திற்குள் அழைத்துப் பின்னர் அவரனைவரையும் தமிழ் மொழியினைத் தாமாகவே விரும்பிக் கற்க வைக்க முடியும். எனவே இவ்வாறான எனது ஆங்கிலப் பதிப்புக்களிற்கு வரவேற்புத்தந்து உதவுமாறு எனது இரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். அதுமட்டுமல்லாது மென்மேலும் 'எனது பூர்வீகம்' மெருகேறுவதற்காக புதிய நிகழ்படத்துண்டுகள், புதிய பல ஆக்கங்கள், குட்டிக்கதை என்னும் புதிய பகுதி போன்றவைகளும் வெகுவிமரிசையாகத் தொடங்கப்படப் போகின்றது. எனவெ அனைத்து உலகத்தினையும் அன்போடு மீண்டும் வருக 'எனது பூர்வீகத்திற்கு' என வரவேற்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !