செவ்வாய், 9 ஜூன், 2009

கனவுகள்

ஒரு பெண்ணைத் தொடர்கின்றேன்............

நான் ஒரு தோட்டம் போன்ற தோற்றம் கொண்ட வீட்டின் வெளியே தினம் நடந்து வந்து கொண்டிருக்கின்றேன். அச்சமயம் அப்பகுதியில் அமைந்திருந்த ஒற்றையடிப் பாதையினால் ஒரு பெண்ணும் நடந்து சென்றார். இவர் எங்கிருந்து வருகின்றார் என்பதனை அறிய நான் அவர் வந்த பாதை நோக்கிச் செல்லும் பொழுது அவர் ஒரு கல்லூரியில் இருந்து வந்தது தெரிந்தது. இக்கனவினை இன்று காலை நான் கண்டேன், மேலும் இக்கனவினை ஆராய்ந்து பார்க்கும்பொழுது தினம் நடக்கும் சம்பவம் என் நினைவிற்கு வருகின்றது, அச்சம்பவமானது நான் காலை நேர வேலையின் பின் எனது முதல் பேருந்தினை எடுக்க எத்தனிக்கும் வேளை ஒரு அழகிய வட இந்தியப் பெண்ணைக் காண்பேன், அவர் மூக்குத்தி ஒன்றும் குத்தியிருப்பார். அப்பெண்மணி வழமையாக நான் ஏறும் பேருந்துத் தரிப்பிடத்திலிருந்து அடுத்த பேருந்துத் தரிப்பிடத்தில் ஏறுவார். சில வேளைகளில் நான் ஏறும் இடத்தில் வந்தேறுவார். அவர் கீல் மற்றும் செப்பர்ட் பகுதியில் இறங்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நான் மாலை நேர வேலைக்கு மாறியதன் காரணத்தினால் இவ்வாறு அப்பெண்ணைக் காணாததன் பொருட்டு இக்கனவினைக் கண்டேனோ தெரியவில்லை !.

கருத்துகள் இல்லை:

பதிலளியுங்களேன் !